February 21, 2026, 3:57 AM
25.6 C
Chennai

பிறந்த வீட்டுக்குத் திரும்பிய பெண்… 52 ஆண்டுகள் காத்திருந்து… புகுந்த வீட்டில் பெற்ற நீதி!

registration
registration

திருமணமான ஓராண்டிற்குள் கணவன் இறந்ததால் பிறந்த வீட்டிற்குச் சென்றாள் அந்தப் பெண். 52 ஆண்டுகள் கழித்து என்ன நடந்தது?,

சாதாரணமாக பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் காத்திருப்பது. சிறிது நேரம், சிறிது காலம் வேண்டுமானால் காத்து இருக்கலாம். ஆனால் ஒரு புள்ளியில் அதற்கு பின் எரிச்சல் அதிகமாகி விடும்.

ஆனால் ஒரு பெண்மணி தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக 52 ஆண்டுகள் காத்திருந்தார்.

1967இல் சம்பத் சின்ஹா என்பவர் லீலா என்ற பெண்ணை மணந்தார். இது நடந்தது குஜராத்தில். திருமணமான ஓராண்டிற்குள் சம்பத் மரணமடைந்தார். அவர்கள் குடும்பத்து வழக்கப்படி லீலா தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர்தான் லீலாவுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நதியாட் என்ற ஊரில் நாற்பத்தி மூன்று பிகாட் நிலம் தன் கணவர் பெயரில் உள்ளது என்றும், அதனைத் தன் மைத்துனர் மஹிபத் சின்ஹா அனுபவித்து வருகிறார் என்றும் தெரிந்து கொண்டார்.

புகுந்த வீட்டிற்குச் சென்று மஹிபத்தை கேட்டார். அதற்கு அந்த மைத்துனர் அப்படிப்பட்டது எதுவும் இல்லை என்று கூறி விட்டார். ஆனால் ஊரில் விசாரித்தபோது தன் கணவர் பெயரில் நிலம் இருக்கும் விஷயம் உண்மைதான் என்பதை அறிந்து கொண்டார்.

அதனால் லீலா போலிசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அதற்கு தகுந்த பத்திரங்கள் இல்லாததால் அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. மஹிபத் அதற்குள் தனக்கு அனுகூலமாக அனைத்து பாத்திரங்களையும் தயார் செய்துவிட்டார்.

ஆனால் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு அரசாங்க அலுவலகமாக ஏறி இறங்கினார் லீலா. கடைசியில் மம்லத்தார் முனிசிபல் ஆபீஸில் தன் கணவரின் பெயரில் அந்த நிலம் தொடர்பான டாகுமென்ட்கள் இருப்பதாக தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி அந்த நிலத்திற்கு தான் ஒருவரே வாரிசு என்பதையும் அறிந்தார். அந்த பத்திரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார் லீலா.

டிசம்பர் 2020 இல் இந்தப் பத்திரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சப்மிட் செய்தார். இந்த விஷயம் குறித்து போலீசார் மஹிபத்தை அழைத்து விசாரித்தபோது, தான் பத்திரங்களை போர்ஜரி செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.

போலிசார் இந்த நிலத்துக்கு உரிமையாளர் லீலாவே என்று தெரிவித்தனர். அதனால் 52 ஆண்டுகளாக காத்திருந்தற்கான நீதி அண்மையில் கிடைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories