spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபிறந்த வீட்டுக்குத் திரும்பிய பெண்... 52 ஆண்டுகள் காத்திருந்து... புகுந்த வீட்டில் பெற்ற நீதி!

பிறந்த வீட்டுக்குத் திரும்பிய பெண்… 52 ஆண்டுகள் காத்திருந்து… புகுந்த வீட்டில் பெற்ற நீதி!

- Advertisement -
registration
registration

திருமணமான ஓராண்டிற்குள் கணவன் இறந்ததால் பிறந்த வீட்டிற்குச் சென்றாள் அந்தப் பெண். 52 ஆண்டுகள் கழித்து என்ன நடந்தது?,

சாதாரணமாக பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் காத்திருப்பது. சிறிது நேரம், சிறிது காலம் வேண்டுமானால் காத்து இருக்கலாம். ஆனால் ஒரு புள்ளியில் அதற்கு பின் எரிச்சல் அதிகமாகி விடும்.

ஆனால் ஒரு பெண்மணி தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக 52 ஆண்டுகள் காத்திருந்தார்.

1967இல் சம்பத் சின்ஹா என்பவர் லீலா என்ற பெண்ணை மணந்தார். இது நடந்தது குஜராத்தில். திருமணமான ஓராண்டிற்குள் சம்பத் மரணமடைந்தார். அவர்கள் குடும்பத்து வழக்கப்படி லீலா தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர்தான் லீலாவுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நதியாட் என்ற ஊரில் நாற்பத்தி மூன்று பிகாட் நிலம் தன் கணவர் பெயரில் உள்ளது என்றும், அதனைத் தன் மைத்துனர் மஹிபத் சின்ஹா அனுபவித்து வருகிறார் என்றும் தெரிந்து கொண்டார்.

புகுந்த வீட்டிற்குச் சென்று மஹிபத்தை கேட்டார். அதற்கு அந்த மைத்துனர் அப்படிப்பட்டது எதுவும் இல்லை என்று கூறி விட்டார். ஆனால் ஊரில் விசாரித்தபோது தன் கணவர் பெயரில் நிலம் இருக்கும் விஷயம் உண்மைதான் என்பதை அறிந்து கொண்டார்.

அதனால் லீலா போலிசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அதற்கு தகுந்த பத்திரங்கள் இல்லாததால் அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. மஹிபத் அதற்குள் தனக்கு அனுகூலமாக அனைத்து பாத்திரங்களையும் தயார் செய்துவிட்டார்.

ஆனால் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு அரசாங்க அலுவலகமாக ஏறி இறங்கினார் லீலா. கடைசியில் மம்லத்தார் முனிசிபல் ஆபீஸில் தன் கணவரின் பெயரில் அந்த நிலம் தொடர்பான டாகுமென்ட்கள் இருப்பதாக தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி அந்த நிலத்திற்கு தான் ஒருவரே வாரிசு என்பதையும் அறிந்தார். அந்த பத்திரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார் லீலா.

டிசம்பர் 2020 இல் இந்தப் பத்திரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சப்மிட் செய்தார். இந்த விஷயம் குறித்து போலீசார் மஹிபத்தை அழைத்து விசாரித்தபோது, தான் பத்திரங்களை போர்ஜரி செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.

போலிசார் இந்த நிலத்துக்கு உரிமையாளர் லீலாவே என்று தெரிவித்தனர். அதனால் 52 ஆண்டுகளாக காத்திருந்தற்கான நீதி அண்மையில் கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe