WC 2023: அசத்திய இந்திய அணி! 302 ரன் வித்தியாசத்தில் வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
29ஆம் நாள் – இந்தியா vs இலங்கை
மும்பை – 02.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (357/8, சுப்மன் கில் 92, விராட் கோலி 88, ஷ்ரேயாஸ் ஐயர் 82, ரவீந்தர் ஜதேஜா 35*, மதுஷங்கா 5/80, சமீரா 1/71) இலங்கை அணியை (19.4 ஓவரில் 55, ஆஞ்சலோ மேத்யூஸ் 12, தீக்ஷணா 12*, ரஜிதா 14, ஷமி 5/18, சிராஜ் 3/16, பும்ரா 1/8, ஜதேஜா 1/4) 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் பூஜ்யம் ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் இந்திய அணி அற்புதமான ஆட்டம் ஆடியது.

முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ரோஹித் ஷர்மா விக்கட்டை இழந்து 60 ரன் எடுத்தது. அடுத்த 11 முதல் 20 ஓவர்களில் விக்கட் இழக்காமல் மேலும் 60 ரன்கள். 21 முதல் 30 ஓவர்களில் ஷுப்மன் கில் (92 ரன், 92 பந்துகள், 11 ஃபோர், 2 சிக்சர்) விக்கட்டை இழந்து 73 ரன், 31 முதல் 40 ஓவர்களில் விராட் கோலி (88 ரன், 94 பந்துகள், 11 ஃபோர்), கே.எல். ராகுல் (19 பந்துகளில் 21 ரன்) ஆகியோரின் விக்கட்டுகளுடன் 71 ரன். 41 முதல் 50 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் (9 பந்துகளில் 12 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (56 பந்துகளில் 82, 3 ஃபோர், 6 சிக்சர்), ஷமி (2 ரன்), ஜதேஜா (24 பந்தில் 35 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரின் விக்கட்டுகளுடன் 93 ரன்.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கட் இழப்பிற்கு 357 ரன் எடுத்திருந்தது. இதில் கடைசி ஓவரில் இரண்டு விக்கட்டுகள்.

கடினமான இலக்கை அடைய இலங்கை ஆடவந்தபோது பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பதுன் நிசாங்கா ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் திமுத் கருணரத்னே ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சதீர சமரவிக்ரமா ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவர் முடிவில் இலங்கை அணி மூன்று விக்கட்டுகள் இழந்து 2 ரன்; அந்த இரண்டு ரன்னும் பும்ரா வீசிய வைட் பந்துகள்.

நாலாவது ஓவர் முதல் பந்தில் சிராஜ் வீசிய முதல் பந்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். பத்தாவது ஓவரை வீச ஷமி வந்தார். அவரது ஓவரின் மூன்றாவது பந்தில் சரித் அசலங்கா ஆட்டமிழந்தார்; அடுத்த பந்தில் துஷான் ஹேமந்தா ஆட்டமிழந்தார். பத்து ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

தோல்வி அந்த அணியின் கண் முன்னே தாண்டவம் ஆடியது. அதன் பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 12 ரன், தீக்ஷணா ஆட்டமிழக்காமல் 12 ரன், ரஜிதா 14 ரன் எடுத்தனர். 19.4 ஓவரில் இலங்கை அணி 55 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஒரு மோசமான தோல்வியைப் பெற்றது. இந்திய அணியின் முகம்மது ஷமி 5/18, முகம்மது சிராஜ் 3/16, ஜஸ்பிரீத் பும்ரா 1/8, ரவீந்தர் ஜதேஜா ¼ ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

ஐந்து விக்கட் எடுத்ததற்காக முகம்மது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி இந்த வேற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

இலங்கை அணி ஏறத்தாழ இனி அரையிறுதிக்கு தகுதி பெறமுடியாது. நாளை ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் லக்னோவில் விளையாட இருக்கின்றன. இந்தியாவின் அடுத்த ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணியுடன் கொல்கொத்தாவில் நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories