December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்

புதுதில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சிபிஐ கோரியபடி, மேலும் 3 நாட்கள் அவருக்கு சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இன்றுடன் சி.பி.ஐ., காவல் முடித்து நீதிமன்றத்தில் கார்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். இவர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும், இவரிடம் மேலும் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்றும் சி.பி.ஐ., இன்று நீதிமன்றத்தில் கோரியது. அதனை ஏற்று, மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ நீதிமன்றக் காவல் அளித்தது. முன்னதாக, ஒரு நாள், தொடர்ந்து 5 நாட்கள் என்று விசாரணைக்கு சிபிஐ காவல் அளித்தது. ஆனால், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். எனவே தொடர்ந்து 3 நாட்கள் மேலும் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இன்னொரு வழக்காக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடு பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்திக்கு அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பி இருந்தது. இவ்வாறு சம்மன் அனுப்ப, அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என, உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது . முன்ஜாமினும் அளிக்க முடியாது என்று நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியது. இதனால் சிபிஐ மட்டுமல்லாம, அமலாக்கத்துறையின் பிடியும் கார்த்தி சிதம்பரம் மீது மேலும் இறுகுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories