4 ஆண்டுகள் பதவியை அனுபவித்துவிட்டு நாடகம் ஆடுகிறார் சந்திரபாபுநாயுடு: ரோஜா குற்றச்சாட்டு

roja - 2026

பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு நான்கு ஆண்டுகள் மத்திய அமைச்சரவையின் பதவியை அனுபவித்துவிட்டு தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற நாடகத்தை ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆடுவதாக நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசில் கடந்த 4 ஆண்டு காலமாக பதவி அனுபவித்து வந்த தெலுங்கு தேச அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது என்பது வெறும் நாடகம். ஆந்திர மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் வர உள்ளன. இதனால், மக்களை சந்திக்க மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

தொடக்கத்திலிருந்தே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். சிறப்பு அந்தஸ்துக்கு பதில், சிறப்பு நிதியே போதுமானது என சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றினார். தற்போது மக்கள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருவதால், வேறு வழியின்றி சந்திரபாபு நாயுடு இறங்கி வந்துள்ளார். ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏன் தெலுங்கு தேசம் வெளியேறவில்லை ? இதிலிருந்தே தெரிகிறது இது அப்பட்டமான நாடகமென்பது. தெலுங்கானாவில் மேலவை உறுப்பினர் தேர்தலின்போது, சந்திரபாபு நாயுடு லஞ்சம் கொடுப்பது தொடர்பான ஆடியோ வெளியானது. அப்போது, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் சரண் அடைந்தார். அதனால்தான் அவரால், சிறப்பு அந்தஸ்து குறித்து மத்திய அரசிடம் போராட முடியவில்லை.

இவ்வாறு எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்தார்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories