4 ஆண்டுகள் பதவியை அனுபவித்துவிட்டு நாடகம் ஆடுகிறார் சந்திரபாபுநாயுடு: ரோஜா குற்றச்சாட்டு

roja - 2026

பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு நான்கு ஆண்டுகள் மத்திய அமைச்சரவையின் பதவியை அனுபவித்துவிட்டு தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற நாடகத்தை ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆடுவதாக நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசில் கடந்த 4 ஆண்டு காலமாக பதவி அனுபவித்து வந்த தெலுங்கு தேச அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது என்பது வெறும் நாடகம். ஆந்திர மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் வர உள்ளன. இதனால், மக்களை சந்திக்க மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

தொடக்கத்திலிருந்தே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். சிறப்பு அந்தஸ்துக்கு பதில், சிறப்பு நிதியே போதுமானது என சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றினார். தற்போது மக்கள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருவதால், வேறு வழியின்றி சந்திரபாபு நாயுடு இறங்கி வந்துள்ளார். ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏன் தெலுங்கு தேசம் வெளியேறவில்லை ? இதிலிருந்தே தெரிகிறது இது அப்பட்டமான நாடகமென்பது. தெலுங்கானாவில் மேலவை உறுப்பினர் தேர்தலின்போது, சந்திரபாபு நாயுடு லஞ்சம் கொடுப்பது தொடர்பான ஆடியோ வெளியானது. அப்போது, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் சரண் அடைந்தார். அதனால்தான் அவரால், சிறப்பு அந்தஸ்து குறித்து மத்திய அரசிடம் போராட முடியவில்லை.

இவ்வாறு எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories