December 6, 2025, 8:03 AM
23.8 C
Chennai

IPL 2025: வெற்றிகரமான தொடக்கத்துடன் பெங்களூர் அணி!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – முதல் ஆட்டம் – கே கே ஆர் vs ஆர் சி பி – கொல்கொத்தா – 22.03.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (174/8, அஜிங்க்யா ரஹானே 56, சுனில் நரேன் 44, ரகுவன்ஷி 30, க்ருணால் பாண்ட்யா 3/29, ஹேசல்வுட் 2/22, யஷ் தயால், ரசிக் சலாம், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (16.2 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 177 ரன், பில் சால்ட் 56, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59, ரஜத் படிதர் 34, லியம் லிவிங்க்ஸ்டோன் 15, வருண் சக்ரவர்த்தி 1/43, சுனில் நரேன் 1/27, வைபவ் அரோரா 1/42) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று கொல்கொத்தாவில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச்ரஸ் பெங்களூரு அணியும் கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. கொல்கொத்தா அணியில் அஜிங்க்யா ரஹானே அணித்தலைவராக இருந்தார். பெங்களூரு அணிக்கு ரஜத் படிதர் அணித்தலைவராக இருந்தார்.

          பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியின் தொடக்க வீரரான க்விண்டன் டி காக் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (26 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) உடன் அஜிங்க்யா ரஹானே (31 பந்துகளில் 44 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) இணைந்து ஆடி 10 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோரை 2 விக்கட் இழப்பிற்கு 109 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர். மிக மெதுவாக ஆடக்கூடிய, சிறந்த டெஸ்ட் மட்டையாளராகக் கருதப்படும் ரஹானே இன்று அதிரடியாக ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 10ஆவது ஓவர் முடிவில் சுனிலும் 11ஆவது ஓவரில் ரஹானேயும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ரன் ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. சில விக்கட்டுகளும் வேகமாக வீழ்ந்தன. 20 ஓவர் முடிவில் எட்டு விக்கடுகள் இழப்பிற்கு கொல்கொத்தா அணி 174 ரன் எடுத்தது.

          அதன் பின்னர் ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (31 பந்துகளில் 56 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் விராட் கோலி (36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (இம்பாக்ட் பிளேயர்) (10 பந்துகளில் 10 ரன்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் லியம் லிவிங்க்ஸ்டோன் (5 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடி 16.2 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 177 ரன் அடித்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

          பெங்களூரு அணியின் சுழல் பந்துவீச்சாளர், தனது பந்துவீச்சின் மூலம் மூன்று விக்கட் எடுத்த க்ருணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories