பூ..ன்னும் சொல்லலாம், புய்ப்பம்ன்னும் சொல்லலாம்… நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்! வாரியமா? ஸ்கீமா? யு.பி.சிங் அளித்த பதில்!

cauvery issue upendra pratab singh - 2026

புது தில்லி: தமிழகம் சொல்வது போல் வாரியமா அல்லது கர்நாடகம் சொல்வது போல் திட்டமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறைச் செயலர் யு.பி.சிங், அட… பெயரில் என்ன இருக்கிறது…. காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் சரி, ஸ்கீம் என்றாலும் சரி, எல்லாமே ஏதோ ஒரு பெயர்தான். வரும் மே 3 ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முக்கியம். அதைச் செய்வோம் என்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில், நீர் நிலைகளைத் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான இரு வார நிகழ்வு தில்லியில் நிறைவடைந்தது. அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து விளக்குவதற்காக, தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சத்யபால் சிங், மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் குழுவும் கலந்து கொண்டது. குறிப்பாக, தமிழக பிரச்னை, காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து தமிழக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதிலளித்தார் யு.பி.சிங்.

அப்போது அவர், “மே 3 ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரைவு திட்டத்தை மத்திய அமைச்சரவையில் அளித்து ஒப்புதல் பெற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்துள்ளதாகக் கூறியுள்ளது. எனவே அதன்படி செய்யப்படும்.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

cauvery 1 - 2026

மேலாண்மை வாரியமா, ஸ்கீமா என்பது குறித்து பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் முடிவு செய்ய இயலாது. தமிழகமும், புதுச்சேரியும் இதனை காவிரி மேலாண்மை வாரியம் என்கின்றன. கர்நாடகம் ‘ஸ்கீம்’ என்றே கூறுகிறது. காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் அமைப்பின் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. அதில் பிரச்சினை இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழகம் அழைப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். காவிரி நீர் திறப்பு தொடர்பான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதுதான் தற்போது முக்கியமான அம்சம். இது குறித்துதான் தற்போது பரிசீலித்து வருகிறோம்” என்றார்.

தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் மத்திய அரசுக்குத்தான் உத்தரவிட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினாரே! அப்படி இருக்க ஏன் மாநிலங்களிடம் இந்தத் தீர்ப்பு குறித்து விவாதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.

அதற்கு அவர், உச்ச நீதிமன்றம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட பின்னர், மத்திய அரசு தன்னிச்சையாக அதனை செய்திருக்கலாமே என்று கேட்கின்றீர்கள். மத்திய அரசு ஏன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களையும் அழைத்து, கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்டு, கருத்தொருமிப்பு ஏற்பட முயன்றது என்றால், மத்திய அரசு இந்தப் பிரச்னையை கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களின் சுதந்திரத்திலும் மதிப்பளித்து கருத்து கேட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

cauvery1 - 2026

நாளையே காவிரி மேலாண்மை வாரியம் அல்லது வேறு ஒரு பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும், அந்த அமைப்பு எடுக்கும் முடிவுக்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவை. எனவே தான் 4 மாநிலங்களிடமும் அவரவர் தரப்பு விளக்கம், ஆலோசனைகள் கேட்கப்பட்டன. காவிரி விவகாரத்தை அந்தந்த மாநிலங்கள் அவற்றின் நோக்கில் அணுகுகின்றன. ஆனால் மத்திய அரசு இதனை கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அணுகுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சரியானதொரு அமைப்பை உருவாக்கவே மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. பின்னாளில் எவருக்கும் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாத அளவில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய விஷயம் இது” என்றார் யு.பி.சிங்.

வரைவு செயல்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் இறுதி முடிவு எடுக்க எத்தனை நாட்களாகும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு யு.பி.சிங், வரைவு செயல்திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு பிறகு அந்த அமைப்பு இறுதி வடிவம் எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பதை இப்போது நாங்கள் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அந்த வரைவு செயல் திட்டத்தின் மீது நீண்ட நாட்கள் விவாதம் எதுவும் நடைபெறாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு செயல் திட்டத்தில், ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விரும்பி உத்தரவிட்டால், அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப் படலாம். மாறாக, மத்திய அரசு கொடுக்கும் வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தால், அது உடனே அரசாணையாக அறிவிக்கப் பட்டு விடும் என்றார்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

வரைவு செயல் திட்டத்துக்கு மேலும் கால அவகாசம் கோருவீர்களா என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே மத்திய அரசு செயல்படுகிறது. எனவே நீதிமன்றம் வரையறை செய்துள்ள காலக் கெடுவுக்குள் வரைவு செயல்திட்டம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்றார் யு.பி.சிங்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories