நீட் தேர்வு தொடங்கியது: வெளி மாநிலங்களில் எழுதுபவர்கள் சுமார் 1500 பேர்!

neet2 - 2026

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதித் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு இன்று காலை துவங்கியது. இந்தத் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை தொடங்கியது.

சி.பி.எஸ்.இ நடத்தும் இந்தத் தேர்வை, நாடு முழுவதும் 13,26,725 பேர் எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் இவர்களுக்கு 10 நகரங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேருக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய1,500 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories