
பெங்களூர்:
பெங்களூரில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மினி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையில் கூறியபோது,
”பெங்களூரு அருகில் உள்ள லகொண்டனஹள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சில் 19 வயது பெண் ஏறினார். அப்போது கீளினர் மஞ்சுநாத்திடம் (23) பஸ் ஓட்டுநர் ரவி (26) பஸ் ஓட்டுமாறு கூறிவிட்டு, ஓடும் பஸ்சில் அந்தப் பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்டுச் சென்றுவிட்டனர். அந்தப் பெண் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரின் பேரில் ஓட்டுநர் ரவி மற்றும் கிளீனர் மஞ்சுநாத் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சுளிபெல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


