நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை

Published:

07 June24 Amith shah - 2026பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.

அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி ‘சிந்தன் ஷிபிர்’ என்னும் இருநாள் ஆலோசனை கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய செயலாளர் வி.சத்தீஷ், குஜராத் மாநில பொறுப்பாளர் புபேந்திரா யாதவ், மத்திய மந்திரி பர்ஷோத்தம் ருபாலா, முதல் மந்திரி விஜய் ருபானி, துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

குஜராத்தில் உள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் பணிக்குழுக்களை அமைப்பது தொடர்பாகவும், இதர பிரசார ஏற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட உள்ளது.

மேலும், முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சி காலத்தின்போது அமல்படுத்தப்பட்ட ‘மிசா’ என்னும் அவசரநிலை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று விருதுகள் அளித்து கவுரவிக்கும் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img