குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதி வழங்குவதே அரசின் நோக்கம்: எய்ம்ஸ்.,ஸில் மோடி பேச்சு

Published:

04 June27 Modi - 2026

சாதாரண மக்களும் மன நிறைவான வகையில் மருத்துவ வசதிகளைப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பேசினார் நரேந்திர மோடி.

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி. அடிக்கடி சென்று அவரைப் பார்த்து வரும் மோடி, இன்றும் நேரில் சென்று வாஜ்பாய் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில், முதியோருக்கான தேசிய மருத்துவ மையத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்துப் பேசினார் பிரதமர் மோடி.

அப்போது அவர், நாட்டு மக்களுக்கு இயன்ற அளவுக்கு குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம். கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்பட்டதைவிட அதிகமாக மத்திய பாஜக அரசு, புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட திட்டமிடப்பட்டு, அனுமதி வழங்கியிருக்கிறது.. என்றார்.

பின்னர், சப்தர்ஜங் மருத்துவமனையில் 555 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவையும், 500 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவையும் தொடங்கிவைத்த பிரதமர், அந்த மருத்துவமனையை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்த ரூ.1,300 கோடி செலவிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரதான கட்டடத்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதி ஒன்றையும் இணைக்கும் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதியோருக்கான தேசிய மருத்துவ மையம், ரூ.300 கோடி செலவில் அடுத்த ஒன்றரை ஆண்டில் கட்டப்படவுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img