டெல்லி போலீசார் பொதுமக்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் இன்முகத்துடன் பேசும்படியும் பல மணி நேரமாக காத்திருப்பவர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேவைப்பட்டால் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்களை உபசரிக்க தேநீர் கடைகளை அமைக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


