புத்தாண்டு கொண்டாட ராகுல் ஐரோப்பா பயணம்

புதுதில்லி,

புத்தாண்டு கொண்டாட, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பா செல்வதாகக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் தனது 3ஆவது வெளிநாட்டு பயணமாக ராகுல் காந்தி, ஐரோப்பா செல்கிறார். இது தொடர்பான தகவல்களை அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் தெரிவித்தது: ‘சில நாள் பயணமாக நான் ஐரோப்பா செல்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் பிரியமானவர்களுக்கும் மகிழ்வும், சந்தோஷமும் புத்தாண்டு கொண்டு வரும் என நான் நம்புகிறேன்’

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ராகுல் ஓய்வில் வெளிநாடு செல்வதாக காங்கிரஸ் கட்சி திடீரென அறிவித்தது. நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளாமல் அவர் வெளிநாடு சென்றது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரசார் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவர் எங்கிருக்கிறார்? என்பது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், 57 நாட்களுக்குப்பின் ஏப்ரலில் அவர் நாடு திரும்பினார். அவர் பாங்காக் சென்றிருந்ததாக கட்சியினர் பின்னர் தெரிவித்தனர். பின்னர் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார். இது தொடர்பான படங்களையும் அவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
தற்போது இந்த ஆண்டில் தனது 3 ஆவது பயணத்தை அவர் அறிவித்துவிட்டுச் செல்கிறார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories