புது தில்லி : சென்னை – தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை – தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடி மதிப்பில் புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலை சென்னை – விழுப்புரம் வரை 10 வழிச் சாலையாகவும், விழுப்புரம் – தஞ்சாவூர் – திருச்சி வரை 8 வழிச்சாலையாகவும், திருச்சி – தூத்துக்குடி வரை 6 வழிச்சாலையாகவும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய சென்னை – தூத்துக்குடி சாலைத் திட்டத்தின் மூலம் சென்னை – தூத்துக்குடி இடையே பயணத் தொலைவு 100 கி.மீ., வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறப் பட்டுள்ளது.