பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

Published:

kashmir5 - 2026

காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் இன்று நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்துக் கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியுள்ளது; பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

 

இதனிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீர் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை காலை 9.15க்கு கூடுகிறது. இதில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் படுகிறது

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத சக்திகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று குடியரசு தலைவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img