பழைய வீடியோக்களைப் பகிர்ந்து பொய்த் தகவல்களால் பதற்றம் ஏற்படுத்த முயலும் பாகிஸ்தானியர்கள்!

rehman malik pakistani - 2026பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் காஷ்மீரில் காவல்துறை அட்டூழியம் என்று கூறி பழைய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் கேட்டுள்ளனர்.

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளித்துவந்த 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்தது குறித்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பாகிஸ்தான், இதற்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க முயன்றது. ஆனால், சர்வதேச சமூகம் இதனை ஒதுக்கித் தள்ளியதால், இப்போது பாகிஸ்தானின் முக்கியப் பிரமுகர்கள் உள்பட ஐ.எஸ்.ஐ., ஏஜெண்டுகள் தாங்களே களத்தில் இறங்கி பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆதரவு டிவிட்டர் சமூகத் தளம்தான்! பாகிஸ்தானைச் சேர்ந்த செயல் அதிகாரியின் கட்டுப் பாட்டில் இருப்பதால், டிவிட்டரில் பொய்களைப் பரப்புவதில் புகுந்து விளையாடி வருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.

காஷ்மீர் குறித்த பொய்களைப் பரப்பி வரும் பாகிஸ்தானியரில் அதன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கும் ஒருவர். அவர், இந்தியப்படைகள் காஷ்மீர் மீது அட்டூழியங்களை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டு ஒரு போலி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மாலிக் தனது பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை நசுக்கும் விதமாக செயல்படும் இந்திய ஆயுதப்படைகளின் அட்டூழியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள கிராமங்களைத் தாக்க இந்தியப் படைகள் துப்பாக்கிகளுடான ஹெலிகாப்டர்களை பயன்படுத்தின என்று மாலிக் கூறியுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

மாநிலத்தில் முழுமையான கட்டுப்பாடு இருந்தபோதிலும், காஷ்மீரிகள் இந்திய கொடூரத்தின் வீடியோக்களை தங்களுக்கு அனுப்பி வருவதாக மாலிக் தெரிவித்துள்ளார் அவரது இந்த வீடியோவை பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் பகிர்ந்து கொண்டு, அவரது இதே கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையோ, பாகிஸ்தானும் அதன் தலைவர்களும் செய்து வரும் கலப்புப் போரை அறிந்து, மாலிக் கூறிய குற்றச்சாட்டுகளை உடனடியாக மறுத்துள்ளது.

மாலிக் வெளியிட்டுள்ள வீடியோவை “தீய உள்நோக்கம் கொண்டது என்று கூறும் காவல்துறையினர், தவறான வீடியோ அகற்றுவதற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளனர். இவை பழைய ஷெல் வெடிப்பின் வீடியோ, அதை புதிதாக ஏற்பட்டது போல் பகிர்ந்துள்ளார் மாலிக் என்று புகார் கூறியுள்ளனர்.

கடந்த 2018 அக்டோபரில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் வெடிகுண்டு இருந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அப்போது வீடு தீப்பற்றியது. இந்த நேரத்தில், பாதுகாப்புப் படையினர் அந்த வீடு அருகே பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களை தடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி அந்த வீட்டின் அருகே சென்ற போது, வீடு தீப்பற்றிய இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஆறு பொதுமக்கள் உயிர் இழந்தனர்! இது குறித்து யூடியூபில் அப்போது இதே வீடியோ பகிரப் பட்டது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் டிவிட்டர் பதிவில் தகவல் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் பாகிஸ்தானியர்கள், இது மோடி அரசால் கடந்த வாரம் நிகழ்த்தப் பட்ட அக்கிரமம் என்று சொல்லி டிவிட்டர் பதிவுகளில் கூறி வருகின்றனர்.

நேற்றும் கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் இயல்புநிலையை ஜீரணிக்க முடியாத ஒரு பாகிஸ்தான் ஊடகவியலாளர் போலி செய்திகளைப் பரப்பி, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்ட முயற்சி செய்தார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஊரடங்கு அமலின் போதான அனுமதிச் சீட்டு இல்லாத காரணத்தால் அவரை மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்க வில்லை என்றும், அதனால் கோபப்பட்ட ஒரு முஸ்லீம் காஷ்மீரி போலீஸ்காரர், 5 சிஆர்பிஎஃப் வீரர்களைக் கொன்றார் என்றும், இதனால் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினருக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் வாஜ் கான் ட்வீட் செய்திருந்தார், ஆனால், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் காவல்துறை இரு தரப்பும், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பொய்களைத் தோலுரித்துக் காட்டியது.

twitter letter jkpolice - 2026ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் போது, புதிய யதார்த்த உலகுக்கு மாநிலம் படிப்படியாக மாறி வருகிறது. எப்படி இருந்தாலும், பாகிஸ்தானின் இது போன்ற கற்பனைகள், காஷ்மீரின் யதார்த்த நிலவரத்துக்கு முற்றிலும் மாறானது. இதனை பாகிஸ்தானியர்கள் செய்து கொண்டிருப்பது, அவர்களின் மத ரீதியிலான வழக்கமான இந்திய விரோத மனப்பான்மை.

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் சினிமாத் துறையினரும் செய்வது பச்சை தேசத் துரோகம்! கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இவர்கள் இந்த மண்ணில் விளைந்ததை உண்டு, இந்த நாட்டில் வாழும் தகுதியை இழந்துவிட்டவர்கள்!

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories