ராஜா-பாலு: வாரிசுகளின் வடிவில் மல்லுக்கட்டும் மேதைகளின் பிரச்னை

இசை வியாபாரிகள்
இளையராஜா- எஸ்.பி.பிக்கு  இடையேயான பிரச்சினை அவர்களுக்கு இடையேயானது அல்ல. அவர்களின் வாரிசுகளுக்கு இடையேயான பிரச்சினையாகும்.
கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சினைக்கு காரணம்.
சினிமா வாய்ப்பு அறவே இல்லாமல் வீட்டில் நீண்டகாலமாக ஓய்வில் இருந்த கார்த்திக் ராஜா, தனது தந்தையை வைத்து இசைக்கச்சேரி நடத்துவது என முடிவு செய்து சில வருடங்களாக இசைக்குழுவோடு நாடு நாடாக சுற்றிவருகிறார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடத்தி பெரும் தொகையை ஈட்டினார் .
தற்போது அதே வழியில் இறங்கியிருக்கிறார் எஸ்.பி.பி சரண். ஆரம்பத்தில் இளையராஜா இசைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி, சமீப காலங்களில் அதைத் தவிர்த்து வந்திருக்கிறார். காரணம், கார்த்திக் ராஜாவைப் போல தானும் தனது தந்தையை வைத்து நாடு நாடாக சுற்றி பணம் ஈட்டவேண்டும் என எஸ்.பி.பி சரண் ஆசைப்பட்டதால்.
இந்த இரண்டு வாரிசுகளுக்கிடையான போட்டிதான் இரண்டு மேதைகளை மோதிக்கொள்ளும் அளவுக்கு தற்போது கொண்டு சென்றிருக்கிறது. ஒருவரது இசைக்கச்சேரியில் இன்னொருவர் பாடவிரும்பவில்லை. அல்லது மறுக்கிறார். அப்படியெனில் அவர்களது இசைக்கச்சேரியில் இவர் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது. இவ்வளவுதான் பிரச்சினை.
ஆக இருதரப்புக்கு இடையேயான இந்த பிரச்சினை இசை சம்பந்தப்பட்டது அல்ல. வியாபாரம் சம்பந்தப்பட்டது. இரண்டு இசை வியாபாரிகள் மோதிக்கொள்கிறார்கள்.
இசை உலகத்தில் இது முதல்தடவை அல்ல. ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு பெரியவிஷயமும் அல்ல. முன்பு,  கே.ஜே.ஜேசுதாஸ் குரலை ஓரளவு ஒத்திருக்கிற பின்னணிப் பாடகர் உன்னிமேனன், சினிமாவில் வாய்ப்பு குறைந்த காலகட்டத்தில் இசைக்கச்சேரிகளில் ஜேசுதாஸ் பாடல்களைப் பாடி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்.
உடனே கே.ஜே.ஜேசுதாசின் மகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிமேல் தனது தந்தை பாடிய பாடல்களை உன்னிமேனன் மேடைகளில் பாடக்கூடாது என தடை வாங்கினார். ஒரு பாடகர் பாடிய பாடலை இன்னொரு பாடகர் பாடக்கூடாது என தடைவாங்கும்போது, அந்தப் பாடலை உருவாக்கியவர் என்கிற முறையில் வியாபார ரீதியாக அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தடை வாங்குவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கண்டிக்கக்கூடிய விஷயமும் அல்ல.
சரி, பேஸ்புக்கில் இவ்வளவு பொங்கிய எஸ்.பி.பி, அந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டுக்காகவா  அர்ப்பணிக்கப் போகிறார்..? அல்லது அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக வழங்கப்போகிறாரா..?
அவர், அவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதில் நாம் ஏன் மோதிக்கொள்ளவேண்டும்..?
ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories