ராஜா-பாலு: வாரிசுகளின் வடிவில் மல்லுக்கட்டும் மேதைகளின் பிரச்னை

இசை வியாபாரிகள்
இளையராஜா- எஸ்.பி.பிக்கு  இடையேயான பிரச்சினை அவர்களுக்கு இடையேயானது அல்ல. அவர்களின் வாரிசுகளுக்கு இடையேயான பிரச்சினையாகும்.
கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சினைக்கு காரணம்.
சினிமா வாய்ப்பு அறவே இல்லாமல் வீட்டில் நீண்டகாலமாக ஓய்வில் இருந்த கார்த்திக் ராஜா, தனது தந்தையை வைத்து இசைக்கச்சேரி நடத்துவது என முடிவு செய்து சில வருடங்களாக இசைக்குழுவோடு நாடு நாடாக சுற்றிவருகிறார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடத்தி பெரும் தொகையை ஈட்டினார் .
தற்போது அதே வழியில் இறங்கியிருக்கிறார் எஸ்.பி.பி சரண். ஆரம்பத்தில் இளையராஜா இசைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி, சமீப காலங்களில் அதைத் தவிர்த்து வந்திருக்கிறார். காரணம், கார்த்திக் ராஜாவைப் போல தானும் தனது தந்தையை வைத்து நாடு நாடாக சுற்றி பணம் ஈட்டவேண்டும் என எஸ்.பி.பி சரண் ஆசைப்பட்டதால்.
இந்த இரண்டு வாரிசுகளுக்கிடையான போட்டிதான் இரண்டு மேதைகளை மோதிக்கொள்ளும் அளவுக்கு தற்போது கொண்டு சென்றிருக்கிறது. ஒருவரது இசைக்கச்சேரியில் இன்னொருவர் பாடவிரும்பவில்லை. அல்லது மறுக்கிறார். அப்படியெனில் அவர்களது இசைக்கச்சேரியில் இவர் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது. இவ்வளவுதான் பிரச்சினை.
ஆக இருதரப்புக்கு இடையேயான இந்த பிரச்சினை இசை சம்பந்தப்பட்டது அல்ல. வியாபாரம் சம்பந்தப்பட்டது. இரண்டு இசை வியாபாரிகள் மோதிக்கொள்கிறார்கள்.
இசை உலகத்தில் இது முதல்தடவை அல்ல. ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு பெரியவிஷயமும் அல்ல. முன்பு,  கே.ஜே.ஜேசுதாஸ் குரலை ஓரளவு ஒத்திருக்கிற பின்னணிப் பாடகர் உன்னிமேனன், சினிமாவில் வாய்ப்பு குறைந்த காலகட்டத்தில் இசைக்கச்சேரிகளில் ஜேசுதாஸ் பாடல்களைப் பாடி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்.
உடனே கே.ஜே.ஜேசுதாசின் மகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிமேல் தனது தந்தை பாடிய பாடல்களை உன்னிமேனன் மேடைகளில் பாடக்கூடாது என தடை வாங்கினார். ஒரு பாடகர் பாடிய பாடலை இன்னொரு பாடகர் பாடக்கூடாது என தடைவாங்கும்போது, அந்தப் பாடலை உருவாக்கியவர் என்கிற முறையில் வியாபார ரீதியாக அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தடை வாங்குவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கண்டிக்கக்கூடிய விஷயமும் அல்ல.
சரி, பேஸ்புக்கில் இவ்வளவு பொங்கிய எஸ்.பி.பி, அந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டுக்காகவா  அர்ப்பணிக்கப் போகிறார்..? அல்லது அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக வழங்கப்போகிறாரா..?
அவர், அவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதில் நாம் ஏன் மோதிக்கொள்ளவேண்டும்..?
ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories