வெள்ளைத் தோல் இல்லாவிடில் சோனியாவை தலைவராக ஏற்பரா? – கருத்துக் கூறிய அமைச்சரை பதவிநீக்க காங்கிரஸ் கோரிக்கை

giriraj-singh-bjpஹாஜிபூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாஜகவின் அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சோனியா காந்தி மட்டும் வெள்ளைத் தோல் கொண்டிருக்கவில்லை எனில், அவரை காங்கிரஸ்காரர்கள் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்று, கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இவ்வாறு அநாகரிகமாகக் கருத்து தெரிவித்திருக்கும் கிரிராஜ் சிங்கை அமைச்சரவையில் இருந்து மோடி நீக்க வேண்டும்; இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங்… “ராஜீவ் காந்தி ஒரு நைஜீரியா நாட்டு பெண்ணை திருமணம் செய்திருந்தால்… அவர் வெள்ளைத் தோல் கொண்டிருக்கமாட்டார். அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றுக் கொள்ளுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்குள்ளார் என்பதற்கு, மாயமான மலேசிய விமானத்துடன் ஒப்பிட்டு கேலி செய்தார் கிரிராஜ். சோனியா காந்தி தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிரிராஜ் சிங்குக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கிரிராஜ் சிங்கிடம் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, என் கருத்தினால் சோனியா காந்தி மற்றும் ராகுல்ஜீ காயம் அடைந்திருந்தால், நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்களே இதனைப் பெரிது படுத்துகின்றனர் என்றார் அவர். இந்நிலையில் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. “பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதற்காகவே அவரை அமைச்சரவையில் சிலரை வைத்துள்ளார், ஒருவேளை பீகார் மாநிலத்துக்கு பாஜகவுக்கு நல்ல தலைவர் இல்லை என்றும் நான் நினைக்கிறேன்,” என காங்கிரஸ் கட்சித் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில், பைத்தியத்தின் எல்லை, வரம்பு மீறிய கருத்து. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories