கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!

kamal shankar - 2026

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ஆம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளது. கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில்தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது லைகா!

இந்தியன் 2 செட்டில் விபத்து ஏற்பட்டதை அடுத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறி கமல், லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் லைகா நிறுவனத்தின் சார்பில் அதன் டைரக்டர் நீல்காந்த் நாராயண்பூர் கமலுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

lyca - 2026

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது…
லைகா ப்ரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் டைரக்டராக பிப்ரவரி 22ம் தேதி நீங்கள் எங்கள் சேர்மனுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்கிறேன்.

பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த துயரச் சம்பவங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. உயிர் இழந்த 3 பேரின் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம். சம்பவம் குறித்து அறிந்தவுடன் சுபாஷ் கரன் மற்றும் மூத்த மேலாளர் அடுத்த விமானத்தில் பிப்.20ஆம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னைக்கு வந்து நேராக சவக்கிடங்குக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

நாங்கள் உங்கள் அலுவலகத்துடன் தொடர்பில் இருந்தோம். நீங்கள் சவக்கிடங்குக்கு வந்த 15 நிமிடத்தில் நாங்களும் வந்துவிட்டோம். அப்போதே… இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ 2 கோடி இழப்பீட்டை அறிவித்தார் சுபாஷ்கரன்.

மேலும் காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கும் வகை செய்யப்பட்டது. உங்கள் கடிதம் வரும் முன்பே இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டது. இது பிப்ரவரி 22ஆம் தேதிக்கு முன்பாக உங்களுக்கு தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

சர்வதேச நிறுவனம் என்கிற முறையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் இந்தியன் 2 படப்பிடிப்பில் இப்படி ஒரு விபத்து நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

இதுபோன்ற விஷயங்களை அனைவரும் சேர்ந்துதான் கையாள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். திறமைசாலியும், அனுபவசாலியுமான நீங்கள், மூத்த இயக்குநரான ஷங்கர் ஆகியோர் இருந்ததால் எங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உங்களின் இடத்துக்கு தகுந்து மேம்பட்டிருக்கும் என்று நம்பினோம். மொத்த படப்பிடிப்பும் உங்களது மற்றும் இயக்குநரின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் தான் நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்திருந்தோம். சுந்தர்ராஜன், மணிகண்டன் ஆகியோரை இக்குநர் பரிந்துரை செய்ததன் பேரில் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர்களாக பணியமர்த்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வைத்தோம். அவர்கள்தான் படத் தயாரிப்புக்கு முழுப் பொறுப்பை ஏற்று, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டார்கள்.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு எடுத்துள்ளோம். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக சுந்தர்ராஜன் மற்றும் மணிகண்டனிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விளக்கம் கேட்டுள்ளோம்.. – இவ்வாறு தெரிவித்துள்ளா நீல்காந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories