ரூ.45 கோடி பழைய நோட்டுகள் பிடிபட்ட விவகாரம்: தண்டபாணிக்கும் பாஜக,.வுக்கும் என்ன தொடர்பு?

bjpcurrenciescaptured - 2026

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2வது தெருவில் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சாக்கு மூட்டைகளில், ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்திய போலீஸார் பணத்தைக் கைப்பற்றினர். இதில் பிடிபட்ட தண்டபாணி என்பவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பாஜகவைச் சேர்ந்த நபர் என்று ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது. ஆனால், அவருக்கும் பாஜக.,வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஊடகங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் செய்தியை வெளியிட்டதாகவும் பாஜக., தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் யார் அந்த தண்டபாணி என்பது குறித்தும், ஊடகங்களில் வெளியான பொய்ச் செய்தி குறித்தும் பாஜக ., பிரமுகர் ஓமாம்புலியூர் ஜெயராமன் கூறியது…

மீண்டும், மீண்டும் சிலுவையில் ஊசலாடும் ஊடக தர்மம்.

இன்று காலை முதலே பெரும்பாலான தொலைக்காட்சி channelகள் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராமலிங்கம் &co என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தண்டபாணி வீட்டில் 45கோடி பெருமானமுள்ள பழைய 500, 1000ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது, அவர் பாஜக பிரமுகர் என செய்தி சொன்னனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதில் வேடிக்கை என்னவென்றால் நம் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதிருந்தவர் இந்த தண்டபாணி. 2015ம் ஆண்டில் மரணம் அடைந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.ஆனந்தராஜ் மூலம் 4,5கூட்டங்களுக்கு வந்து, பின்னர் இக்கட்சி நமக்கு செட்டாகாது என திரும்பிப் பார்க்காமல் சென்ற இந்த தண்டபாணியைத் தான் தமிழ் தொலைக்காட்சிகள் நடுநிலையோடும், ஊடக தர்மத்தோடும், பொறுப்பும் பொது நலத்தோடும் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டு குதூகலிக்கின்றனர்.
பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை தலைவர் Dolphin ஸ்ரீதரும் பல தொலைக்காட்சி நிறுவனங்களை அழைத்து பாஜகவில் தண்டபாணி உறுப்பின்ராகக் கூட இருந்ததில்லை, தவறான தகவலை நிறுத்தவும் எனக் கூறினர். சில ஊடகங்கள் மட்டுமே தண்டபாணி வீட்டில் சோதனை பற்றி சொல்லி பாஜககாரன் என சொல்லவில்லை.

ஆனால் News7, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி போன்றவர்கள் மட்டும் மீண்டும் மீண்டும் பாஜககாரன் என செய்தி ஒளி பரப்பினர். மதியம் 1மணியளவில் News7 நெல்சனை தொலைபேசியில் அழைத்து என் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால் இது வரை news7 scrollingல் நீக்கவில்லை. ஒருசில channelகள் தவிர மற்ற அனத்து சேனல்களும் பாஜக உறுப்பினர் என்றே தகவலை பரப்பி நம்மைக் கேவலப் படுத்தும் வேலையை சிறப்பாக செய்கின்றனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

1996ல் வைகோவை எதிர்த்து ரவிச்சந்திரன் என்பவர் MLA ஆனார். அவர் தேர்தலில் நிற்கும்போதே ஆடு திருடிய வழக்கு பதிவாகி இருந்தது. பின்னர் 2002ம் ஆண்டு வாக்கில் திமுக தலைப்பொதுக் குழு உறுப்பினர் ஆக இருந்தபோது காவல்துறையால் 2கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயுனுடன் கைது செய்யப்பட்டார். பினர் காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி தலைமறைவானார் ரவிசந்திரன். இதே ரவிச்சந்திரன் police உடையில் போய் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வீராணம், பூச்சிமருந்து, 2G,ஹெராயின் கடத்துபவர்கள் தங்கள் கட்சியில் இருப்பது போன்று தான் பாஜகவிலும் இருப்பார்கள் என கலைஞர் தொலைக்காட்சி நினைத்துவிட்டார்கள் போலும்.

காங்கிரஸ் ஜோதிமணி, கட்சிமாறி கிஷோர் போன்றவர்களும் பாஜக பிரமுகர் என தீர்ப்பே எழுதிவிட்டனர். நம் கட்சியைச் சேர்ந்த ஒருவருடன் கிஷோர் ஒருமுறை கமலாலயம் வந்தார். ஏதோ ஒரு forgery வழக்கில் கிஷோர் மாட்டினால் அவரும் பாஜக உறுப்பினர் என சொல்வார்களா? ஏனெனில் தன் நண்பருடன் கமலாலயம் வந்துள்ளாரே?

ஏரித் திருடன், கார்னெட் மணல் திருடன், கல்விக் கொள்ளையர்கள், Media முகமூடியுடன் அலையும் திக குடும்ப வாரிசு, Bofors திருட்டு கட்சியின் கரூர் மணல் கொள்ளையனிடம் மாமூல் வாங்கும் ஜோதி, மன்னார்குடி mafiaவிற்கு PRO வேலை பார்க்கும் பச்சோந்தி யோக்யசிகாமணி போன்றோர் உரத்த குரலில், பாஜக உறுப்பினரே இல்லாத ஒருவனை பாஜககாரன் எனச் சொல்லி தம் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.
நம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவும், IT பிரிவும் விறைந்து செயல்பட்டு பொய்யை முறியடித்து, உண்மையை ஊருக்கு உறக்க சொல்ல வேண்டும்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories