February 23, 2026, 11:40 AM
29.4 C
Chennai

ரூ.45 கோடி பழைய நோட்டுகள் பிடிபட்ட விவகாரம்: தண்டபாணிக்கும் பாஜக,.வுக்கும் என்ன தொடர்பு?

bjpcurrenciescaptured - 2026

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2வது தெருவில் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சாக்கு மூட்டைகளில், ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்திய போலீஸார் பணத்தைக் கைப்பற்றினர். இதில் பிடிபட்ட தண்டபாணி என்பவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பாஜகவைச் சேர்ந்த நபர் என்று ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது. ஆனால், அவருக்கும் பாஜக.,வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஊடகங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் செய்தியை வெளியிட்டதாகவும் பாஜக., தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் யார் அந்த தண்டபாணி என்பது குறித்தும், ஊடகங்களில் வெளியான பொய்ச் செய்தி குறித்தும் பாஜக ., பிரமுகர் ஓமாம்புலியூர் ஜெயராமன் கூறியது…

மீண்டும், மீண்டும் சிலுவையில் ஊசலாடும் ஊடக தர்மம்.

இன்று காலை முதலே பெரும்பாலான தொலைக்காட்சி channelகள் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராமலிங்கம் &co என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தண்டபாணி வீட்டில் 45கோடி பெருமானமுள்ள பழைய 500, 1000ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது, அவர் பாஜக பிரமுகர் என செய்தி சொன்னனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதிருந்தவர் இந்த தண்டபாணி. 2015ம் ஆண்டில் மரணம் அடைந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.ஆனந்தராஜ் மூலம் 4,5கூட்டங்களுக்கு வந்து, பின்னர் இக்கட்சி நமக்கு செட்டாகாது என திரும்பிப் பார்க்காமல் சென்ற இந்த தண்டபாணியைத் தான் தமிழ் தொலைக்காட்சிகள் நடுநிலையோடும், ஊடக தர்மத்தோடும், பொறுப்பும் பொது நலத்தோடும் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டு குதூகலிக்கின்றனர்.
பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை தலைவர் Dolphin ஸ்ரீதரும் பல தொலைக்காட்சி நிறுவனங்களை அழைத்து பாஜகவில் தண்டபாணி உறுப்பின்ராகக் கூட இருந்ததில்லை, தவறான தகவலை நிறுத்தவும் எனக் கூறினர். சில ஊடகங்கள் மட்டுமே தண்டபாணி வீட்டில் சோதனை பற்றி சொல்லி பாஜககாரன் என சொல்லவில்லை.

ஆனால் News7, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி போன்றவர்கள் மட்டும் மீண்டும் மீண்டும் பாஜககாரன் என செய்தி ஒளி பரப்பினர். மதியம் 1மணியளவில் News7 நெல்சனை தொலைபேசியில் அழைத்து என் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால் இது வரை news7 scrollingல் நீக்கவில்லை. ஒருசில channelகள் தவிர மற்ற அனத்து சேனல்களும் பாஜக உறுப்பினர் என்றே தகவலை பரப்பி நம்மைக் கேவலப் படுத்தும் வேலையை சிறப்பாக செய்கின்றனர்.

1996ல் வைகோவை எதிர்த்து ரவிச்சந்திரன் என்பவர் MLA ஆனார். அவர் தேர்தலில் நிற்கும்போதே ஆடு திருடிய வழக்கு பதிவாகி இருந்தது. பின்னர் 2002ம் ஆண்டு வாக்கில் திமுக தலைப்பொதுக் குழு உறுப்பினர் ஆக இருந்தபோது காவல்துறையால் 2கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயுனுடன் கைது செய்யப்பட்டார். பினர் காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி தலைமறைவானார் ரவிசந்திரன். இதே ரவிச்சந்திரன் police உடையில் போய் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வீராணம், பூச்சிமருந்து, 2G,ஹெராயின் கடத்துபவர்கள் தங்கள் கட்சியில் இருப்பது போன்று தான் பாஜகவிலும் இருப்பார்கள் என கலைஞர் தொலைக்காட்சி நினைத்துவிட்டார்கள் போலும்.

காங்கிரஸ் ஜோதிமணி, கட்சிமாறி கிஷோர் போன்றவர்களும் பாஜக பிரமுகர் என தீர்ப்பே எழுதிவிட்டனர். நம் கட்சியைச் சேர்ந்த ஒருவருடன் கிஷோர் ஒருமுறை கமலாலயம் வந்தார். ஏதோ ஒரு forgery வழக்கில் கிஷோர் மாட்டினால் அவரும் பாஜக உறுப்பினர் என சொல்வார்களா? ஏனெனில் தன் நண்பருடன் கமலாலயம் வந்துள்ளாரே?

ஏரித் திருடன், கார்னெட் மணல் திருடன், கல்விக் கொள்ளையர்கள், Media முகமூடியுடன் அலையும் திக குடும்ப வாரிசு, Bofors திருட்டு கட்சியின் கரூர் மணல் கொள்ளையனிடம் மாமூல் வாங்கும் ஜோதி, மன்னார்குடி mafiaவிற்கு PRO வேலை பார்க்கும் பச்சோந்தி யோக்யசிகாமணி போன்றோர் உரத்த குரலில், பாஜக உறுப்பினரே இல்லாத ஒருவனை பாஜககாரன் எனச் சொல்லி தம் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.
நம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவும், IT பிரிவும் விறைந்து செயல்பட்டு பொய்யை முறியடித்து, உண்மையை ஊருக்கு உறக்க சொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories