December 5, 2025, 6:00 PM
26.7 C
Chennai

ஆடி அமாவாசை… காவிரி கரையில் திதி தர்ப்பணத்துக்கு தடை!

amma mandapam srirangam cauvery
amma mandapam srirangam cauvery

ஆடி அமாவாசையை ஒட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று திருச்சி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 20, நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிக்கரைகளில் பக்தர்கள் கூடி, முன்னோர் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக ஆடி அமாவாசை என்றால், தமிழகத்தில் புனித நதிக்கரைகளில், புனித நீர் நிலைகளில் ஹிந்துக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து, திதி தர்ப்பணங்கள் கொடுப்பது வழக்கம். ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்கள், தட்சிணாயண, உத்தராயண புண்யகாலங்கள் தொடங்கும் மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள்.

இந்த தினங்களில் முன்னோர் வழிபாடு என்பது சிறப்பாக ஹிந்துக்களால் கடைப்பிடிக்கப் படுகிறது. அதிகாலை புனித நீர்நிலைகளில் நீராடி, அந்த நீர்நிலைகளின் நீரால் எள்ளும் தண்ணீருமாய் இறைத்து முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது என்பது நம்பிக்கை. இதற்காக, தென்மாவட்டங்களில் தாமிரபரணிக் கரையில் உள்ள பாபநாசம் தொடங்கி, மற்றுமுள்ள படித்துறைகளிலும், குற்றாலம் உள்ளிட்ட அருவிக் கரைகளிலும், குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலும் பெருமளவிலான அன்பர் கூட்டத்துடன் கடைப்பிடிக்கப் படுகிறது.

அது போல் பவானி,திருச்சி, திருவரங்கம், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிக் கரைகளிலும் ஹிந்துக்கள் பெருமளவில் கூடி திதி தர்ப்பணங்கள் கொடுப்பர். இது வருடந்தோறும் ஆடி, தை இரு மாதங்களிலும் வரும் அமாவாசை தினத்தில் கடைப்பிடிக்கப் படுவது வழக்கம்.

ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காலம் என்பதால் மக்கள் கூட்ட்டம் ஒன்றாகக் கூடுவது தடுக்கப் பட்டுள்ளது. 144 தடை உத்தரவு போட்டு, கூட்டம் கூடக் கூடாது என்று போலீஸார் வலியுறுத்தினர்.

அதை ஒட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது என்று, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories