யார் 420…? தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல்!

edappadi dinakaran panneerselvam - 2026

புது தில்லி:
கட்சிக்கு விசுவாசி, தலைவர், பொறுப்பு என்பதெல்லாம் போய், இப்போது 420 யார் என்பதில் டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனமிக்கப்பட்டதே சட்டவிரோதமானது; செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட வகையில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி குழுவினரை, நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றார். எடப்பாடி நேற்றுவரை கட்சி வளர்ச்சிக்காக என்ன செய்தார் என்று கேட்டார். பின்னர் ஏமாற்றுப் பேர்வழி என்று பொருள்படும் வகையில் எடப்பாடி ஒரு 420 என்று முத்திரையிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், இன்று தில்லிக்கு வந்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று காலை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தினகரன் அவரை 420 என்று வசைபாடியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தினகரன் ‘420’ என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுகின்றேன். கடந்த 3 மாத நிகழ்வுகளைப் பார்த்திருப்பீர்கள். அதனால் 420 என்பது அவருக்குத்தான் பொருந்தும்” எனக் கூறினார்.

பின்னர் இரு அணிகள் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அணிகள் இணைப்பு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இணையும் என நம்புகிறோம்.” என்றார். மேலும், “பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோம். ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வெற்றி பெற்றோம். இதிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.

எடப்பாடி அணியினர் எடுத்த தீர்மானத்துக்கு தினகரன் தரப்பு மிகுந்த கோபத்தில் உள்ளது. கருத்து வேற்றுமையால் பிரிந்து கிடந்த சசிகலா குடும்பத்தினர், இப்போது ஒன்று சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றும் ஆசையில் உள்ளனர் என்பது, தினகரனுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வந்த திவாகரனின் பேட்டியில் இருந்து வெளித் தெரிகிறது. “தினகரன் துணை பொதுச்செயலாளராக செயல்பட முடியாது என்ற தீர்மானம் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சி நிச்சயம் காப்பாற்றப் பட்டு விடும், ஆட்சியை காப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். தினகரன் தலைமையில் மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் அடுத்தக் கட்டம் என்ன என்பது தெரியும்” என்று திவாகரன் கூறியுள்ளார்.

இதனிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் தங்களது பதவியை ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையிலாவது ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது பற்றி தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தினகரனால் பதவி பெற்ற 19 எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ராஜினாமா செய்யும் பட்சத்தில் பழனிச்சாமி அரசு கவிழும் என தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories