மனைவியுடன் தகராறு! பெற்ற குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை!

munusamy

மண்டபம் அருகே குடும்ப தகராறில் மனைவி மீதான ஆத்திரத்தில் 1½ வயது ஆண் குழந்தையை எரித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அக்காள்மடம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் மரியா ஆயிஷா (வயது 20). மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மண்டபம் அருகே வேதாளை ஊராட்சிக்குட்பட்ட குஞ்சார்வலசை கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வேலை பார்த்து வரும் முனியசாமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபினாஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை உண்டு.

இந்த நிலையில் தனது தங்கையின் திருமணத்திற்காக மரியா ஆயிஷா தனது சொந்த ஊரான அக்காள்மடத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தை அபினாஷை அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் திருமண வீட்டில் இருந்த போது முனியசாமிக்கும், மரியா ஆயிஷாவிற்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி மரியா ஆயிஷாவிடம் சண்டையிட்டு அவரை தாக்கி குழந்தை அபினாஷை தூக்கி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்து குஞ்சார்வலசைக்கு சென்று மரியா ஆயிஷா குழந்தையை பற்றி முனியசாமியிடம் கேட்டார்.

அப்போது குழந்தை ஒரு இடத்தில் பத்திரமாக இருப்பதாக கூறினார். இதில் சந்தேகமடைந்த மரியா ஆயிஷா, தனது கணவர் முனியசாமி, குழந்தை அபினாஷை தூக்கி சென்று விட்டதாகவும், அவனை மீட்டுத்தரும்படியும் பாம்பன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து பாம்பன் போலீசார், மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். போலீசார் முனியசாமியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது மனைவி மீதான ஆத்திரத்தில் குழந்தை அபினாஷை எரித்துக் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் முனியசாமி தெரிவித்துள்ளார்.

மனைவியிடம் சண்டை போட்டு விட்டு குடிபோதையில் இருந்த முனியசாமி, தனது குழந்தை அபினாஷை தூக்கிக் கொண்டு மண்டபம் பஸ் நிறுத்தத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ரெயில் தண்டவாளம் வழியாக குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த முனியசாமி வேதாளை அருகே உள்ள காட்டுப்பகுதியில் வைத்து குழந்தையை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு முனியசாமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த குழந்தை அபினாஷின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பின்னர் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில்தான் குழந்தையை கொலை செய்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மேலும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories