குலசை தசரா விழா கோலாகலம்; நாளை சூரசம்ஹாரம்!

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினத்தில் பல
லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் வரும் 30ந்தேதி இரவு 12 மணிக்கு
பலலட்சம் பக்தர்கள் முன்பு மகிஷா சூரசம்ஹார விழா நடக்கிறது.

துாத்துகுடி மாவட்டம் திருச்செந்துார் தாலுகாவில் குலசேகரப்பட்டிணத்தில்
பிரசித்தி பெற்ற பழமையான தசரா விழா கொண்டாடப்படும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாரம்மன்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தியாவில் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக பலலட்சம் பேர் கூடும் இடம் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன்கோயில்..

மூவுலகிற்கும் நாயகியான முத்தாரம்மன் அம்மையும் அப்பனுமாக காட்சிதரும்
திருக்கோயில்.உடலில் தோன்றும் முத்துக்களை ஆற்றுவதால் முத்தாரம்மன் என்றும்
முத்து ஆரங்களை சாற்றுவதால் முத்தாரம்மன் என்ற திரு பெயரால் வழிபாடு செய்யப்படுகிறது.

முத்தாரம்மன் அம்மையும் அப்பனுமாக ஒரே சன்னதியில் காட்சி தருவது இங்கு
மட்டுமே…மனித வாழ்வில் செய்வினை மற்றும்மனநோய் தீர்க்கும் திருக்கோயிலாக
உள்ளது.

முற்காலத்தில் வரமுனி என்ற முனிவர் வாழ்ந்த காலத்தில் அப்போது அங்கு வந்த
அகத்திய முனிவரால் சாபத்திற்கு உள்ளாகி எருமை தலையும் மனித உடலும் பெற்ற
வரமுனி மகிஷா சூரனாக மாறினார்.பின்னர் முனிவர்களுக்கு தொல்லை கொடுத்ததால் முனிவர்கள் பராசக்தியை வேண்டியவுடன் மகிஷாசூரனை அழித்த வரலாறுக்குரிய கோயிலாகும்.

இக்கோயிலில் கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அன்று முத்தாரம்மன் துரக்கையாகவும்
22ந்தேதி விஸ்வகர்மேசுவரராகவும்,
23ந்தேதி பார்வதியாகவும்,
24ந்தேதி பாலசுப்ரமணியராகவும்,
25ந்தேதி நவநீதகிருஷ்ணராகவும்,
26ந்தேதி மகிசா சூரமர்த்தினியாகவும்,
நேற்று 27ந்தேதி ஆனந்த நடராசராகவும்,
28ந்தேதி கஜலட்சுமியாகவும் .
இன்று 29ந்தேதி கலைமகளாகவும் காட்சி கொடுக்கிறாள்…
இந்நிலையில் வரும் 30ந்தேதி நாளை சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் நள்ளிரவில்
சிதம்பரேஸ்வர்கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் விரதமிருந்து பலவேடங்கள் அணிந்த பல லட்சம் முத்தாரம்மன் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

பல லட்சம் பேர் வந்து வழிபட்டு செல்லும் கோயில் விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் இராமசுப்ரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories