December 5, 2025, 8:44 PM
26.7 C
Chennai

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: உறவினர் தகவல்

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா. 1980ல் பிறந்த அந்தப் பெண், இதனை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே, ஜெயலலிதாவின் அத்தை மகள் உறவின் முறையான லலிதா என்ற பெண்மணி, பெங்களூரில் செய்தியாளர்கள் சிலரிடம் இது குறித்துப் பேசினார். அப்போது, ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை. ஜெயலலிதாவின் தாய் இறந்து விட்டதால், என் பெரியம்மா ஜெயலட்சுமிதான் பிரசவம் பார்த்தார். தனக்குக் குழந்தை பிறந்தது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக் கொண்டார். இந்தக் குழந்தை அம்ருதாதான் என்று என்னால் உறுதியாகக் கூற இயலாது. மரபணுச் சோதனையில் தான் உறுதிப்படுத்த முடியும். என் தாயார் ஜெய்சிகாவின் அண்ணன் ஜெயராமின் மகள்தான் ஜெயலலிதா என்று கூறினார்.

amrutha - 2025

முன்னதாக, இது குறித்து எம்.ஜி.ஆர்., விசுவாசியும் இதயக்கனி இதழை நடத்திக் கொண்டு வருபவருமான இதயக்கனி விஜயன் தன் சமூக ஊடகப் பதிவில் இவ்வாறு கூறியிருக்கிறார்…

ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள் ?

‘ஜெயலலிதாவுக்கு ஓரு மகள் உண்டு.
அமெரிக்காவில் இருக்கின்றார்’ என்று நக்கீரன் போன்ற பத்திரிகைகள் இருபது வருடங்களாக கதை விட்டுக்கொண்டிருக்கின்றன.

எம். ஜி. ஆர். அமைச்சரவையில்
இருந்த ஒரு மந்திரியே என்னிடம் ஒரு சிறுமியின் படத்தைக்காட்டி
‘இது ஜெயலலிதாவின் மகள். அமெரிக்காவில் இருக்கிறாள்’ என்றார்.

‘இதைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்துவோம்’ என்றதோடு சரி.

கடந்த டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த சமயத்தில் ‘ஜெயலலிதா மகள்’ என்று ஓரு மலையாளப்பெண்ணின் படத்தை ஊடகங்கள் வெளியிட்டு குழப்பம் உண்டாக்கின.

இது ஒருபுறம் இருக்கட்டும். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முத்தண்ணனின் அனுபவங்களை ‘தினமலர்’ வாரமலரில் ‘எம்.ஜி.ஆர். நினைவுகள்’ என்ற பெயரில் தொடராக எழுதிய போது ஜெ. மகள்
பற்றிய விபரம் கேட்டேன்.

” அதில் உண்மையில்லை. அது பற்றி விசாரித்து தெரிந்த்து கொண்டோம்.
தலைவர் எம். ஜி. ஆருக்கும் இந்த உண்மைகள் தெரியும்” என்றார்.

ஜெயலலிதா ஒரு தைரியமான
பெண்மணி. அவருக்கு ஓரு குழந்தை
இருந்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளும் தைரியம் இல்லாமலா போகும் ?
– இதயக்கனி விஜயன்

***
இதனிடையே, இந்த விவகாரம், தற்போது ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories