மீனவர்களை விடுதலை கோரி காரைக்காலில் பெண்கள் ஒப்பாரி போராட்டம்

Published:

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கள் பகுதி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி காரைக்காலில் மீனவப் பெண்கள் ஒப்பாரிக் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 22ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 57 மீனவர்களை அவர்களது 7 படகுகளுடன் கோடியக்கரை அருகே 26ந்தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய–மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்கால்மேடு கடற்கரையில் மீனவ பெண்கள் பேரவை சார்பில் நேற்று ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கலந்து கொண்டு கடலில் இறங்கி ஒப்பாரி வைத்து அழுதனர்.

Related articles

Recent articles

spot_img