உலகில் மிக உயரமான, 146 அடி உயரத்தில் உள்ள முருகன்.. ஏப்ரல் 6 இல் கும்பாபிஷேகம்!

murugan - 2026

உலகில் மிக உயரமாக, 146 அடி உயரத்தில், 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட முருகன் சிலைக்கு, ஏப்., 6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த முத்து நடராஜன், 2015ல், புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, மலேஷியாவில் உள்ள முருகன் சிலையை போன்று அமைக்க முடிவு செய்தார்.

மலேஷியாவில் சிலை வடிவமைத்த, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன், 50, அழைத்து வந்து, உலகில் பெரிய முருகன் சிலையை, 3 கோடி ரூபாயில் கட்ட முடிவு செய்தார்.

தொடர்ந்து, 2016 செப்., 6ல் பூமிபூஜை போட்டு பணி துவங்கியது. 2018ல், முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது மகன்கள் ஸ்ரீதர், 50, வசந்தராஜன், 55, ஞானவேல், 52, மகள் பத்மாவதி, 50, ஆகியோர், பணியை தொடர்ந்தனர்.

திருப்பணி குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் கூறுகையில், ”126 அடி உயர முருகன் சிலை, 20 அடி உயர பீடம் என, 146 அடி உயரத்தில், ஏழு கோண வடிவமைப்பில் அறுபடை முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

murugan 1 - 2026

ஏப்., 6ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,” என்றார்.ஸ்தபதி தியாகராஜன் கூறுகையில், ”மலேஷியா முருகன் சிலை வேல் பிடித்தது போல் இருக்கும்; இங்குள்ள சிலை, வலது கையில் ஆசீர்வாதம், இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது.

ஆடை, அணிகலன் அமைத்து, பஞ்சவர்ணத்தில் வண்ணம் தீட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆசிய கண்டத்திலும், உலகளவிலும் பெரிய முருகன் சிலையாக இருக்கும் என்பதால், சுற்றுலா தலமாக இந்த இடம் மாறும்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories