December 6, 2025, 6:09 AM
23.8 C
Chennai

வளர்ப்பு நாயை காப்பாற்ற போனவர்.. உதை விட்ட கங்காரு..!

Kangaroo - 2025

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். சில நேரங்களில் விலங்குகள் மோதிக்கொள்வதையும், சில நேரங்களில் கொஞ்சிக்குலாவுவதையும் நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.

சில வீடியோக்களில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பும் காணப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள காணொலியிலும், கங்காரு ஒன்று ஒருவரை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆனால் இந்த தாக்குதல் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பார்த்தால் அனைவருக்கும் கண்டிப்பாக சிரிப்பு வரும்.

ஒரு நாயைக் காப்பாற்ற செல்லும் ஒருவர், தானே கங்காருவிடம் சிக்கிக்கொள்வதை இந்த வீடியோவில் காணலாம். அந்த நபர் தப்பினோம் பிழைத்தோம் என அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையும் காண முடிகின்றது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தனது நாயைக் காப்பாற்ற கங்காருவின் அருகில் ஒருவர் செல்வதைக் காண முடிகின்றது. கங்காரு தனக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என அவருக்கு தோன்றுகிறது. ஆனால், கங்காருவின் அருகில் அவர் சென்ற உடனேயே, அது அவரை தன் கால்களால் தாக்குகிறது.

கங்காரு கொடுத்த உதையால் அந்த நபர் விழுந்துவிடுகிறார். மறுபுறம் இதைப் பார்த்த அந்த நபரின் குழந்தைகளும் உறவினர்களும் வெகுவாக சிரிப்பதையும் வீடியோவில் கேட்க முடிகின்றது.

இந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த நபர் சுற்றுலா போல் குடும்பத்துடன் காட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது. அப்போது அவருடைய வளர்ப்பு நாயின் அருகில் கங்காரு வருகிறது. அதைக் காப்பாற்ற செல்லும் நபர் பரிதாபமாக தாக்கப்படுகிறார்.

இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவுக்கு சமூக ஊடக பயனர்கள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories