ஏசுவைத்தான் வணங்க வேண்டும்.. கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள்! மாணவிகள் புகார்!

school 1 - 2026

திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து கடவுளை வழிபடக்கூடாது. கிறிஸ்தவ கடவுளை வழிபட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக 2 ஆசிரியர்கள் மீது 6ம் வகுப்பு மாணவி தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அவிநாசியை சேர்ந்த ராக்கிய பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் பள்ளியில் இரு ஆசிரியர்கள் மாணவியை கண்டித்துள்ளனர். நெற்றியில் திருநீர், கழுத்தில் ருத்ராட்சம் ஆகியவற்றை குறிப்பிட்டு மாணவியை ஆசிரியைகள் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிறிஸ்தவ கடவுளை வழிபடும்படி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்து கடவுள்களின் பெயரை எழுதக்கூடாது என ஒரு ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் சிறுமி மனம் உடைந்தார். மேலும் பள்ளிக்கு செல்லமாட்டேன் மாணவி தனது தந்தையிடம் கூறினார். அவர் காரணம் கேட்கவே நடந்த சம்பவத்தை மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இதையடுத்து மாணவியின் தந்தை நேற்று வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆசிரியைகள் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், ”என்மகள் நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து பள்ளி செல்கிறார்.

தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியைகள் என இருவர் அதை குறிப்பிட்டு திட்டியுள்ளனர். மேலும் கிறிஸ்தவ கடவுளை வணங்கும்படி வலியுறுத்தி, இந்து கடவுள் பெயரை எழுதக்கூடாது என கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதனால் மகள் பள்ளி செல்ல மறுக்கிறார். என் மத உணர்வை புண்புடுத்தியது மட்டுமின்றி மகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.

இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரில் ஆசிரியைகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் இன்று விசாரைணை நடத்தி வருகின்றார். மாணவி, மாணவியின் பெற்றோர், ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த இந்து முன்னணியினர் பள்ளி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் ஆசிரியைகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories