இது ‘சமாதி தியான’ புகழ் கடைபிடிக்கும் ‘கீதாசாரம்’: விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ்!

சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும், இந்நாள் துணை முதல்வரும் ஆன ஓபிஎஸ்., இன்று தான் கடைபிடிக்கும் கீதா சாரத் தத்துவத்தை உதிர்த்திருக்கிறார்.

முதல்வர் பதவியை இழந்து ஓர் ஆண்டு ஆனது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப, ஓ.பன்னீர்செல்வம் தத்துவ முத்தை உதிர்த்து ஒரு பதில் அளித்தார்.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். பின்னர், அவரை முதல்வர் ஆக அமர்த்திய சசிகலாவுக்கு தானே முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற பேராசை எழுந்ததால், அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு சசிகலா நெருக்குதல் கொடுத்ததால், ஓபிஎஸ்., இதனைப் பயன்படுத்தி, ஜெ. சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. இப்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோத்து, துணை முதல்வராக இருந்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இருந்தாலும் அவ்வப்போது உரசல்கள், மரியாதைக் குறைவு என்று கூறி சுணங்குவது, ஓரங்கட்டுகிறார்கள் என்று ஆதரவாளர்கள் சொல்வது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்பியபடி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்தார் ஓபிஎஸ்., அப்போது அவர், அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் இயங்குவது குறித்த கேள்விக்கு, “அம்மா உணவகங்கள் லாப நோக்கத்துக்காக தொடங்கப்படவில்லை. அது ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என பதிலளித்தார்.

தொடர்ந்து “நீங்கள் முதல்வர் பதவியை இழந்து ஓராண்டு ஆகிறது. அது குறித்து வருத்தம் இருக்கிறதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ்., “இது ஒரு நல்ல கேள்வி, எதைக் கொண்டுவந்தோம் அதை நாம் இழப்பதற்கு?” என தத்துவார்த்த ரீதியாக பதிலளித்தபடி சென்றார்.

கீதையில் கண்ணன் கூறியதாக சொல்லப் படும் கீதாசார தத்துவம் இது. “எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு.. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்…” என்று நிலையாமைத் தத்துவத்தை விளக்குவது போல் கீதை உபதேசம் கூறப் பட்டிருக்கும். இதனை விரக்தி மனநிலையில் உள்ள ஒருவர், அல்லது உலகியலை வெறுத்து தன் மனநிலையை நலமாகப் பேணுபவர் கைக்கொள்ளும் உபதேசமாக இருக்கும். அதே மனநிலையில் ஓபிஎஸ்.ஸும் பதிலளித்திருக்கிறார். எனவே, இப்போதும் அவர் விரக்தியுற்ற மனநிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories