கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிப்பு.. தந்தை தூக்கி வர பொதுத் தேர்வு எழுதிய மாணவி!

student - 2026

10 ம் வகுப்பு தேர்வில் முதல் பரீட்சைக்கு நடந்து சென்று தேர்வு எழுதிய பள்ளி மாணவி இரண்டாவது தேர்வுக்கு தந்தை கைகளால் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

கரூர் அருகே சுங்ககேட் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (36), இவரது மனைவி கவிதா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

தனியார் பஸ்பாட்டி கம்பெனியில் நாள் கூலி வேலை செய்து வரும் இவருக்கு பெரிய மகள் 11வது படித்து வருகின்றார். இளைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகின்றார்.

கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், முதல் தேர்வுக்கு இவர் அங்கு நடந்து சென்று தேர்வு எழழுதினார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்த நிலையில், 2வது தேர்வான ஆங்கிலம் தேர்வை தந்தை உதவியுடன், அவரது தந்தை அந்த மாணவியை இரண்டு கைகளால் தூக்கி கொண்டு பள்ளிக்கு வந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

காரணம், அந்த மாணவிக்கு மீண்டும் காய்ச்சல் வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இடது காலில் ஒருவிதமான வலி மற்றும் உணர்ச்சியற்ற தன்மையுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது படிப்பு பாதியில் நின்று விடக்கூடாது என்று கடும் வலியுடன் தேர்விற்காக படித்த அந்த பள்ளி மாணவி, இன்று இரண்டாம் தேர்வான ஆங்கிலத்தை எழுத கால்கள் முடியாமல், தன் தந்தை உதவியுடன் தந்தை இரு கைகளால் தூக்கி கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எண்ணற்ற சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இது என்ன விதமான நோய் என்பதனை கண்டறிந்து இனி வரும் காலத்தில் அது போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories