என்ன ஓபிஎஸ் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?!..

   அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறிய கருத்துகளுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துப் பேசுகையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுப் பேசியது பலரையும் அதிரவைக்கும் சம்பவமாகிவிட்டது.

images 19 2 - 2026

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என்று வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே நிறைவுபெற்ற நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறிய கருத்துகள் குறித்து சி.வி. சண்முகம் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தாலே பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கட்சி விதி இருப்பதால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டும் அதிகாரம் இருக்கிறது என்று  சி.வி. சண்முகம் குறிப்பிட்டார்.

மேலும் கூறியதாவது, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான விதி என்ன சொல்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அவசியம் எனக் கருதினால் பொதுக்குழுக் கூட்டப்படலாம். அதில், பொதுக்குழு உறுப்பினர்களில், குறைந்த அளவாக ஐந்தில் ஒரு பங்கு வருகை தர வேண்டும். 

மேலும், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில்  ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொண்டால் பொதுக் குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும் என்று விதி சொல்லியிருக்கிறதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதிப் பெற்றுத்தான் கூட்டப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.

பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இது கட்டாயம். ஆகவே முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் தற்போதைய பொருளாளஐருமான ஓ. பன்னீர்செல்வம் கூறிய கருத்து முழுக்க முழுக்க தவறு என்று குறிப்பிட்டார்.

நேற்று பொதுக்குழுக் கூட்டம் சர்ச்சையுடன் முடிந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை நாடியிருக்கிறார்.

இதற்கிடையே ஓ. பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்று சி.வி. சண்முகம் குறிப்பிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கான விளக்கத்தையும் அவரே அளித்துள்ளார்.

அதாவது, அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே திருத்தப்பட்டுத்தான்  சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த சட்ட விதிகளுக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால், அவையும் காலாவதியாகிவிட்டன.

எனவேதான் அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டேன் எனவும் சி.வி. சண்முகம் விளக்கம் கொடுத்துள்ளார்.

741467 cv shanmugam 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories