மணிப்பூர் நிலச்சரிவு பலி 24 ஆக உயர்வு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த விபத்தில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் முழு மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

753926 army - 2026

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமானப் பகுதிக்கு அருகில் உள்ள ராணுவ முகாமில் புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் பலர் சிக்கிக் கொண்டனர். இதுவரை 13 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 12 ராணுவ வீரர்கள் மற்றும் 26 பொதுமக்களை தேடும் பணி இன்னும் தொடர்கிறது மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

FWpI71bVEAAWB P - 2026
750644 manipur33 - 2026

இவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள். சிலிகுரி பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து, 2 விமானப்படை விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உயிரிழந்த 14 ராணுவ வீரர்களின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக, நிலச்சரிவில் உயிரிழந்த 6 அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்கள் ராணுவத்தின் பிராந்திய காலாட்படை பிரிவில் 107 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

நிலச்சரிவில் சிக்கிய 38 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே பகுதியில் இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related articles

Recent articles

spot_img