திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒருநாளில் உண்டியல் வருவாய் ரூ.6.18 கோடி ..

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது இரண்டாம் முறையாக ஒருநாளில் ரூ.6.18 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்தும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்து வந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக உண்டியலில் நகை, பணங்களை அதிக அளவில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி சராசரியாக ரூ.4 கோடிக்கு குறையாமல் உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் நேற்று 77,907 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,267 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.6.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது ரூ.6.18 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது 2-வது அதிகபட்சமாகும்.

images 29 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories