முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக மனு- சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு..

Published:

மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.

சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்டனர். இதையடுத்து, மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். அதன்படி, கடந்த 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே அணியினர் மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பின் கடந்த 3-ம் தேதி சட்டசபைக்கு புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டார். அதேபோல், 4-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றிபெற்றது.

இந்நிலையில், மராட்டியத்தின் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தல், புதிய சபாநாயகர் நியமனம், புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிகழ்வுகளை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பாக வரும் 11-ம் தேதி நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கு வரஉள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
Eknath Shinde PTI07 03 2022 000093B 2 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img