December 8, 2025, 7:21 PM
25.6 C
Chennai

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக மனு- சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு..

மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.

சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்டனர். இதையடுத்து, மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். அதன்படி, கடந்த 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே அணியினர் மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பின் கடந்த 3-ம் தேதி சட்டசபைக்கு புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டார். அதேபோல், 4-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றிபெற்றது.

இந்நிலையில், மராட்டியத்தின் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தல், புதிய சபாநாயகர் நியமனம், புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிகழ்வுகளை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பாக வரும் 11-ம் தேதி நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கு வரஉள்ளது.

Eknath Shinde PTI07 03 2022 000093B 2 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Topics

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories