மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ!

Published:

gothabaya rajapaksha - 2026

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ அதிகாலை நேரத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணவுப் பொருள் பற்றாக்குறை பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இவை காரணமாக பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இதனால் அதிபர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ கடற்படை உதவியுடன் வெளியேறி, கடற்படைக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டர்களில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயகா விமானப் படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ, தனது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்களுடன் ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அதிகாலை 3 மணி அளவில் அவர் மாலத்தீவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img