மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர்..

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் வருகிற 27-ந்தேதி சென்னை வரும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேரில் சென்று பிரதமரை அழைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

images 21 1 - 2026

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதையொட்டி கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை சிறப்பாக நடத்த உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக அவர் வருகிற 27-ந்தேதி சென்னை வரும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதால் அந்த நிகழ்ச்சியோடு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடிக்கு அழைப்பிதழ் வழங்க வருகிற 19-ந் தேதி டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதால் அவரது நிகழ்ச்சிகள் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

PM Modi 1 1 - 2026

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தாலும் 19-ந் தேதி திட்டமிட்டபடி டெல்லி செல்ல முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குணமடைந்த ஒரு வாரத்திற்குள் பார்க்க அனுமதிக்கப்படுவார்களா? என்பது பற்றி பிரதமர் அலுவலக அதிகாரிகள் தான் முடிவு செய்ய முடியும். அந்த வகையில் 19-ந்தேதி அழைப்பிதழ் வழங்க அனுமதி கிடைக்காவிட்டால் அடுத்த வாரம் வேறொரு தேதியில் பிரதமரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க செல்லக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர்..‌‌

Hon CM Photo 1 - 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றார். அங்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories