விருதுநகரில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலவனத்தம் பகுதியில் அரசு நிகழ்ச்சியில் முதியோர் ஓய்வு கேட்டு மனு அளிக்க வந்த பெண்ணை மனுவால் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலையில் அடுத்த வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் கே கே ஆர் ராமச்சந்திரன் பதவி விலக வேண்டும் இல்லை என்றால் தங்கள் இல்லத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகை விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அடித்ததாக கூறப்படும் கலாவதி என்ற பெண் வருவாய்த்துறை அமைச்சர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரும் தனது குடும்பத்திற்கு 30 ஆண்டுகால நண்பர் தனது அண்ணன் மாதிரி எப்போதும் போல் தான் செல்லமாக அடித்தார் என்று பேட்டி அளித்தார்.
இருப்பினும் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த முற்றுகைப் போராட்டம் தொடரும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே கே ஆர் ராமச்சந்திரன் இல்லம் முன்பாக பாஜக தொண்டர்கள் புதிய கூடும் என்பதை அறிந்த காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காணித்து வந்தனர் இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி சாலையின் முன்பாக உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் வருவாய்த்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர் இந்த நாள் காவல்துறையினருக்கும் பாஜகவின் நிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றி அமைத்ததால் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமடைந்தனர்




