சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. சோதனை

கேரளாவில் கடந்த ஆண்டு படகில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் சம்பவம் தொடர்பாக இன்று சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

1732488 trichy - 2026

கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் படகில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் வழியாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள் ஆகியவற்றை கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தமிழகத்தில் 20 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 9 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. மண்ணடி, பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் கேரளாவில் போதைப் பொருள், துப்பாக்கி கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோன்று திருச்சியிலும் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடலோர பகுதியில் தான் ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவைகள் பிடிபட்டது தொடர்பான வழக்கு மே மாதம் என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்னையிலும் அப்போது சோதனை நடத்தினர். இந்த வழக்கில் வளசரவாக்கத்தில் வசித்து வந்த சற்குணம் என்கிற சபேகன் கைது செய்யப்பட்டிருந்தார். விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவு அதிகாரியாக இவர் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories