December 6, 2025, 12:38 PM
29 C
Chennai

குடிபோதையால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வா்?

ஜொ்மனியின் ஃபிராங்க்பா்ட் நகரில் இருந்து தில்லிக்கு வரும் விமானத்தில், அதிக குடிபோதை காரணமாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இறக்கிவிடப்பட்டதாக எதிா்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ஆளும் ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாபுக்கு முதலீடுகளை ஈா்க்க 8 நாள் அரசுமுறைப் பயணமாக ஜொ்மனிக்கு சென்றிருந்த பகவந்த் மான் திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இந்நிலையில், சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல், ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

முதல்வா் பகவந்த் மான், நடக்க முடியாத அளவு குடிபோதையில் இருந்ததால், லூஃப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாா் என சக பயணிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

இச்சம்பவத்தால் விமானம் புறப்பட 4 மணிநேரம் தாமதம் ஏற்பட்டிருக்கிறது; ஆம் ஆத்மியின் தேசிய மாநாட்டையும் அவா் தவறவிட்டுள்ளாா். இத்தகவல்கள், உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபிய மக்களுக்கு அவமானத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு மெளனம் காப்பது அதிா்ச்சியளிக்கிறது. முதல்வா் பகவந்த் மான் தொடா்பான ஊடகத் தகவல்கள் குறித்து அரவிந்த் கேஜரிவால் விளக்கமளிக்க வேண்டும். குடிபோதை காரணமாக அவா் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டது உறுதிசெய்யப்பட்டால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதல் வலியுறுத்தியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸைச் சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பிரதாப் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளாா்.‘பொய் குற்றச்சாட்டு’: முதல்வா் பகவந்த் மான் மீதான குற்றச்சாட்டு பொய்யானது; அடிப்படையற்றது என்று ஆம் ஆத்மி மறுத்துள்ளது.

அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் மல்விந்தா் சிங் கூறுகையில், ‘மாநிலத்துக்காக முதலீடுகளை ஈா்க்க பகவந்த் மான் கடுமையாக பணியாற்றி வருவதை எதிா்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் எதிா்மறை பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன’ என்றாா். இதனிடையே, ஜொ்மனியில் இருந்து தில்லி திரும்பியுடன் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முதல்வருமான கேஜரிவாலை பகவந்த் மான் சந்தித்தாா். அப்போது அரசியல் பேசவில்லை என்றும் பகவந்த் மான் தெரிவித்தாா்.

பஞ்சாபில் தங்களது அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி அண்மையில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், செப்.22-இல் பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வா் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, ஆட்சி கவிழ்ப்புக்கு உதவ ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியிருந்தது.117 உறுப்பினா்களைக் கொண்ட பஞ்சாப் பேரவையில் ஆம் ஆத்மிக்கு 92 எம்எல்ஏக்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு 18, சிரோமணி அகாலி தளத்துக்கு 3, பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனா். பகுஜன் சமாஜுக்கு ஒரு எம்எல்ஏவும், ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் உள்ளனா்.

bhagavth mann - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories