குளத்து மண் திருட்டால் உயிரிழந்த 5 இளைஞர்கள்; 50 லட்சம் இழப்பீடு தர கோரிக்கை

hindumunnani - 2026

குளத்து மண்ணைத் திருடும் அவலத்தின் காரணமாக 5 இளைஞர்கள் பலி- 50 லட்சம் உதவித்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சென்னை நங்கநல்லூர் சர்வமங்களாம்பிகை சமேத தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ நிறைவு நாளான தீர்த்த வாரி நேற்று (5ஆம் தேதி) காலை மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தில் நடைபெற்ற போது குளத்தின் மண் சரிவில் சிக்கிய ஒருவரை காப்பாற்ற போன நால்வர் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

இச்செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அதிர்ச்சியான செய்தியை திசைதிருப்ப ஊடகங்களும் அரசும் செய்த முயற்சி மிக கேவலமானது.

பலியான இளைஞர்கள் கோவில் பணியாளர்கள் என்றும், கோவில் தனியார் கோவில் என்றும், கோவில் விழாவிற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியை புதிதாக வேறு இடத்திற்கு மாற்றியதால் என்றும், அந்த இளைஞர்கள் ஶ்ரீ பாதம் தாங்கிகள் எனவும் இஷ்டத்திற்கு திசை திரும்பினார்கள்.

இது குறித்து இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் திரு. சி. பரமேஸ்வரன் தலைமையில் ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆராய்ந்தது. கோவிலிலும், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள பகுதிகளிலும் விசாரித்ததில் தான் உண்மை தெரிய வந்தது.

அந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில். வழக்கமான நடைமுறையை பின்பற்றி அரசு துறைகளிடம் விழாவிற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி இந்த விழா நடைபெறும் போது அங்கு இல்லை. அங்கு பலியான இளைஞர்கள் ஶ்ரீபாதம் தாங்கியோ, கோவில் பணியாளர்களோ இல்லை. ஆனால் செய்திகள் எப்படி எல்லாம் பரப்பட்டது என்பதை பார்த்தால் இதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

குளங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப் படுவது ஆபத்தானது என்பதை அரசு அதிகாரிகள் உணர வேண்டும்.

குளக்கரையில் நிகழ்ச்சி நடத்திட எந்த முன்னேற்பாடும், எந்த அரசுத் துறையும் செய்யவில்லை.

திருப்பதி போல குளத்தின் மண் சமமாக உள்ளதா, அதன் ஆழத்தை கவனத்தில் கொண்டு சுற்றி கழிகளால் வேலி அமைத்து அதற்குள் செய்வதற்கு கவனம் கொடுத்திருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பணம் வசூல் வேட்டையிலும், அமைச்சர் நிர்வாகம் செய்வதற்கு பதில் கோவில் வழிபாடுகளில் தலையிட்டு அரசியல் செய்வதுமாக இருந்து வருகிறார்கள்.

பலியான இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள். பொது சேவையில் ஆர்வமுடன் செயல்பட்டவர்கள். கொரோனா காலத்திலும் அந்த பகுதியில் துணிச்சலாக சேவையாற்றிய நல்ல உள்ளம் படைத்தவர்கள். அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

பலியான இளைஞர்கள் குடும்பத்திற்கு அரசு 2லட்சம் நிதி உதவி என்பது கண்துடைப்பு. குறைந்தது 50 லட்சம் நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories