February 22, 2026, 4:19 AM
25.6 C
Chennai

மக்களின் தேவை அறிந்து உடனே செய்வேன்: செங்கோட்டையில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

john pandian tenkasi - 2026

மக்களின் தேவைகளை அறிந்து உடனே செய்வேன், தென்காசி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்று, தென்காசி தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை பகுதியில் பாஜக., சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஜான் பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார். 

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன், தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பல் வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

ஏப்.5 வெள்ளிக் கிழமை நேற்று புளியரை அருகே தமிழக- கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் வேட்பாளர் ஜான் பாண்டியன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

அங்கிருந்து புளியரை, புதூர், கட்டளைக் குடியிருப்பு, தவணை, கற்குடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து தாமரைச் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 

பின்னர், செங்கோட்டை நகரத்திற்கு வந்து கீழ பஜார் முக்கு, தெற்குத் தெரு, வம்பளந்தான் முக்கு, தாலுகா அலுவலகம் சந்திப்பு, மேலூர், பம்பு ஹவுஸ் ரோடு, சேர்வைகாரன்புதுத்தெரு ஆகிய முக்கிய வீதிகளிலும், காலாங்கரை, பெரியபிள்ளைவலசை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

தன்னுடைய பிரசாரத்தின் போது ஜான் பாண்டியன் கூறியதாவது:-

நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன். தொகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதுணையாக இருந்து செய்து கொடுப்பேன்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுச் சென்றவர்கள் நாடாளுமன்றத்தில் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல் அவர்களின் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தான் பேசி வந்தார்கள். நான் அப்படி இல்லை. உங்கள் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று பேசினார்.  

பிரசாரத்தின்போது, மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ராமநாதன், மாவட்ட ஓ.பி.சி. அணித் தலைவர் மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ், நகர பொதுச் செயலாளர்கள் பேச்சிமுத்து, மாரி, மேற்பார்வையாளர் சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகராஜன், ராம்குமார், பொண்ணுலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories