
ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி டிரைவர் தூங்கியதால் கறிக்கடைக்குள் லாரி நுழைந்ததில் இருவர் பலியாகினர் ஒருவர் படுகாயம்மடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாரம் ஏற்ற சென்ற லாரி அதிகாலை 5 மணி அளவில் ராஜபாளையத்தில் செங்கல் பாரத்தை இறக்கி விட்டு சொக்கநாதன் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை ஓரமாக மாட்டுக்கறி கடை போடப்பட்டிருந்தது.
லாரி டிரைவர் தூக்க அசதியில் கறிக்கடைக்குள் லாரியை நுழைத்து விட்டார். இதில் கறி வாங்க நின்று கொண்டிருந்த தளவாய்புரம் காமராஜ் நகரை சேர்ந்த பொன்னையா வயது 70, சுந்தரராஜபுரம் இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ் வயது 16 ஆகிய இருவர் மீது லாரி ஏறியதில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சுந்தர்ராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த மணிமாறன் வயது 26 என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் கிடைத்தவுடன் தளவாய்புரம் போலீசார் விரைந்து சென்று பலியானவர்கள் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் படுகாயம் அடைந்த மணிமாறன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
இது தொடர்பாக லாரி டிரைவர் சொக்கநாதன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலைமலை வயது 38 என்பவரிடம் தளவாய்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.





