சிலையை போலவே துறையும் காணாமல் போச்சா? கமல் கிண்டல்

Published:

kamalhasan - 2026

தமிழக அரசின் நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் உப்புசப்பில்லாமல் இருந்ததாக எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் கூறி வருகின்றனர். தினகரன் அணியினர் ஒருபடி மேலே போய், இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுதான் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து பரபரப்பாக இயங்கி வரும் கமல்ஹாசன், இந்த பட்ஜெட்டை தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார். பகுத்தறிவாளரான அவர் இந்த பட்ஜெட்டில் கோயில்களுக்கு என்று எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

“என் பகுத்தறிவு ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே… ஏன்? காணாமல் போன ஆயிரம் சிலைகளைப் போல், துறையும் காணாமல் போய்விட்டதோ..? என்று பட்ஜெட்டை கலாய்த்துள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img