ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை என மமக அறிவிப்பு

Published:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மனித நேய மக்கள் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது. இந்த இடைத்தேர்தல் என்பது தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உயர்நிலைக்குழு கருதுவதால், தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img