சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து நடிக்க வரும் முதல் பெண் வாரிசு…!

 

கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் முதன்முதலாக நடிக்க வந்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் சாண்டல்வுட்டின் முன்னணி நடிகர்களாக உள்ளனர்

ராஜ்குமாரின் மகன் ராகவேந்திராவின் வாரிசு வினய் தாத்தா வழியில் நடிகர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்குமார் குடும்பத்தில் ஒரு பெண் நடிக்க வந்துள்ளார்.

அவர் தான் ராஜ்குமாரின் மகள் வழிப் பேத்தி தன்யா ராம்குமார். தன்யாவின் தந்தை ராம்குமார் கன்னட படங்களில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார்.

வீட்டில் ஒரு நாள் புதுப்படங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நான் நடிகையானால் ஒப்புக் கொள்வீர்களா என்று தன்யா தனது தாய் பூர்ணிமாவிடம் எதேச்சையாக கேட்டுள்ளார்.

கண்டிப்பாக அம்மா எதிர்ப்பு தெரிவிப்பார் என்று நினைத்துள்ளார் தன்யா. ஆனால் பூர்ணிமாவோ தாராளமாக நடி, யார் வேண்டாம் என்றது என கூலாக தெரிவித்து தன்யாவை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தன் அம்மாவே பச்சைக் கொடி காட்டிய பிறகு குஷியோடு படங்களில் நடிக்க வந்துள்ளார் தன்யா.

புதுமுகம் சுமன் ஜாதுகரின் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்கிறார் தன்யா. அந்த படத்தில் அவர் சுராஜ் கவுடாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

நடிகையாக வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் இருந்த தன்யாவுக்கு சுமன் கூறிய கதை மிகவும் பிடித்துவிட்டதாம்.

இப்படி ஒரு கதையை தான் இதுவரை கேட்டது இல்லை என்கிறார் தன்யா. கன்னட திரையுலகில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது மறைந்த தன் தாத்தா ராஜ்குமார் தான் என்று தன்யா ராம்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் பேத்தி நடிக்க வந்துள்ளார் என்று சாண்டல்வுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

தன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்கனவே நடிப்பில் அசத்திக் கொண்டிருப்பதால் தான் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் என்பதை தன்யா நன்கு புரிந்து வைத்துக் கொண்டுள்ளார்.

ராஜ்குமார் பேத்தி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென்று ஒரு பெயர் எடுக்க விரும்புகிறார் தன்யா. பாலிவுட்டை போன்றே கன்னட திரையுலகிலும் வாரிசுகள் வரத் துவங்கியுள்ளனர். அந்த பட்டியலில் தன்யாவும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories