தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜெயந்தி நடராஜன் ஒரு சந்தர்ப்பவாதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். ஜெயந்தி நடராஜன் கூறுவது பொய் என்று கூறியுள்ள மொய்லி, அமைச்சர்களின் பணியில் ராகுல் காந்தி ஒருபோதும் தலையிட்டதில்லை என்றார். ஓராண்டுக்கு பிறகு தற்போது வாய் திறப்பது ஏன் என்றும் வீரப்பமொய்லி, ஜெயந்தி நடராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

