வேளாண் பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

29 May17 agari - 2026கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல் முறையாக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் உள்ளது. இவற்றில் மொத்தம் 3,422 இடம் நிரப்பப்படவுள்ளது. வேளாண் பல்கலை 65 சதவீதம், அந்தந்த கல்லூரிகள் 35 சதவீதம் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பிளஸ்2 அறிவியல் படித்த மாணவர்கள் மட்டும் இன்று முதல் www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17ம் தேதி பதிவேற்றம் செய்ய இறுதிநாள். ஜூன் 18 முதல் 20ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 7ல் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 9 முதல் 13 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 16ல் தொழில் கல்விக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17, 18ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 23 முதல் 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்ட் 1ல் கல்லூரி துவங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடையும். விவரங்களுக்கு ugadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.tnau.ac.in/admission.html என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்சிடி பிரிவினர் ரூ.300 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் பேங்க்கிங், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். பிளஸ்2 மதிப்பெண் கடந்தாண்டு வரை நேரடி மாணவர் சேர்க்கை நடந்துவந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்குபின், வேளாண் பல்கலை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories