வேளாண் பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

29 May17 agari - 2026கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல் முறையாக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் உள்ளது. இவற்றில் மொத்தம் 3,422 இடம் நிரப்பப்படவுள்ளது. வேளாண் பல்கலை 65 சதவீதம், அந்தந்த கல்லூரிகள் 35 சதவீதம் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பிளஸ்2 அறிவியல் படித்த மாணவர்கள் மட்டும் இன்று முதல் www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17ம் தேதி பதிவேற்றம் செய்ய இறுதிநாள். ஜூன் 18 முதல் 20ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 7ல் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 9 முதல் 13 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 16ல் தொழில் கல்விக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17, 18ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 23 முதல் 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்ட் 1ல் கல்லூரி துவங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடையும். விவரங்களுக்கு ugadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.tnau.ac.in/admission.html என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்சிடி பிரிவினர் ரூ.300 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் பேங்க்கிங், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். பிளஸ்2 மதிப்பெண் கடந்தாண்டு வரை நேரடி மாணவர் சேர்க்கை நடந்துவந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்குபின், வேளாண் பல்கலை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories