விராட்கோலியின் ‘டூப்’பை வைத்து வாக்கு சேகரித்த கிராமத்தையே ஏமாற்றிய அரசியல்வாதி

13 May29 Virtah khoil1 - 2026பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை வைத்து, ஒரு விநோத சம்பவம் நடந்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில். பொதுவாக தேர்தலின் போது அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் ஜெயிக்கும் முன்பே மக்களை ஏமாற்றி இருக்கிறார் ஒரு நபர். புனே மாவட்டம் ஷீரூரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், ”கன்பத் கெளக்வாட்” என்பவர் போட்டியிட்டிருக்கிறார். அப்பகுதியில் இளைஞர்களின் வாக்கு அதிகம் என்பதால், கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தனது சார்பாக வாக்கு சேகரிக்க அழைத்து வரப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து ”கன்பத் கெளக்வாட்” விராட்கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், பேனர்கள் ஊரெங்கும் வைக்கப்பட்டிருந்தது. மே25 அன்று விராட் வருவார் என அவர் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே விராட்டும் காரில் வந்து இறங்கினார். தூரத்தில் இருந்து அவரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். சிலர் அவரின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றிருக்கின்றனர். அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது கன்பத் கெளக்வாட் அழைத்து வந்திருப்பது விராட் கோலி அல்ல. அவரை போலவே தோற்றமுள்ள நபர் என்று. ஆனால் தூரத்தில் நின்று பார்த்த மக்கள் யாரும் இந்த ஏமாற்று வேலையை கடைசி வரை கண்டுபிடிக்கவே இல்லை. எல்லா அரசியல்வாதிகளும் ஓட்டு போட்ட பிறகு தான் ஏமாற்றுவார்கள். இந்த ”கன்பத் கெளக்வாட்” ஓட்டு கேட்கும்போதே இப்படி தகிடுதத்தம் செய்கிறாரே! என அசந்துவிட்டனர் எதிர்கட்சி வேட்பாளர்களும், அப்பகுதி மக்களும்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories