மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு குறித்து செய்தி வெளியானதை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக நடிகர் கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு
தலைவர் – கமல்ஹாசன்
துணைத் தலைவர் – கு. ஞானசம்பந்தன்
பொருளாளர் – சுரேஷ்
பொதுச் செயலாளர் – அருணாச்சலம்
செயற்குழு உறுப்பினர்கள்
ஸ்ரீபிரியா
கமீலா
நாசர்
பாரதி
கிருஷ்ணகுமார்
மவுரியா
குமரவேல்



