எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா  அஞ்சலி

Published:

 
அ.தி.மு.க.,வை நிறுவியரும், முன்னாள் முதலமைச்சரும், எம்.ஜி.ஆர் 28 வது நினைவு நாளான இன்று ( 25-12-2015) அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார் இவரது வருகையால் சென்னை மெரீனா கடற்கரையில் தொண்டர்கள் பலர் குவிந்திருந்தனர் .
 
எம்.ஜி.ஆர் நினைவு நாளான இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அதிமுக பொதுசெயலர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் , இவருடன் அமைச்சர்கள் தொண்டர்கள் பலர் வந்திருந்தனர் .
 
நினைவிடத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்று கொண்டனர் .
 
 
உறுதிமொழியாவது :-
 
 
எம் ஜி ஆர் , புகழ் என்றும் ஒலித்திட அவர் உருவாக்கிய இயக்கத்தில்பணியாற்ற உளமாற உறுதி ஏற்கிறோம் .
 
 
அவரது கொள்கை வழியில் இன்று வளர்ச்சி அடைந்திட 7 வது முறை பொது செயலராக பொறுப்பேற்றுள்ள ஜெ வழியில் நின்று கழகத்தை காத்திடவும் உறுதி ஏற்கிறோம் .
 
 
தமிழகத்தை வளம் பெற செய்யவும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்வோம், மறு வாழ்வு பெற துடிக்கும் தீய சக்திகள் மக்களுக்கு செய்திட்ட துயரங்களை மக்களிடம் எடுத்துரைக்க உருவாக்கிய இயக்கத்தை ஜெ., தலைமையில் செயல்படுவோம் என்று உறுதிமொழி அ.தி.மு.க.வினர் ஏற்றனர்.

 

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img